எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பற்றி.., நடிகை குஷ்பூ கண் கலங்கி பேசி, வெளியிட்ட ரீசன்ட் வீடியோ.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குறித்து நடிகை குஷ்பூ கண் கலங்கி பேசியுள்ளார். 

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேலான பாடல்களை பாடியுள்ளவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவருக்கு அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே கடந்த ஆகஸ்ட்-14 ஆம் தேதி, எஸ்.பி.பியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியானது. இது அவரின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் தற்போது நடிகை குஷ்பூ, எஸ்.பி.பி குறித்து கண் கலங்கி பேசிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர், எஸ்.பி.பியை ஒரு கடளவாக நினைப்பதாகவும், இப்போதும் தன் ஃபோனில் அவர் பெயரை எஸ்.பி.பி தி காட் என்று வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் அவர் விரைவில் குணமாகி வர வேண்டும் என அவர் கண் கலங்க கேட்டுக்கொண்டார். 

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பற்றி.., நடிகை குஷ்பூ கண் கலங்கி பேசி, வெளியிட்ட ரீசன்ட் வீடியோ.! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

எஸ்.பி.பி பற்றி குஷ்பூ வீடியோ | Actress khushboo shares her emotional video for s.p.balasubrahmanyam health

People looking for online information on Khushboo, SP Balasubramaniam, SPB will find this news story useful.