சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்ததை அடுத்து தற்போது அந்த நாடு மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. முதன்முதலாக கொரோனா கண்டறியப்பட்ட பகுதியில் மட்டும் ஏப்ரல் 8-ம் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. அதேநேரம் இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், அமெரிக்கா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் கொரோனாவால் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. குறிப்பாக இத்தாலி நாட்டில் மட்டும் இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர்.
