மன்னிப்பு கேளுங்க! போதை பொருள் விவகாரத்தில் ஷாருக்கானை தாக்கிய கங்கனா ரனாவத்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை கங்கனா ரனாவத், நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதை நடிகர் ஜாக்கி சான் மகன் கைதோடு ஒப்பிட்டுள்ளார்.

2014 ஆம் ஆண்டில், பெய்ஜிங்கில் உள்ள தனது குடியிருப்பில் நண்பர்களுடன்  கஞ்சா வைத்திருந்ததாலும் நடிகர் ஜாக்கி சானின் மகன் ஜெய்சி சான் போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டார். இதனால் தனது மகனுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் ஜாக்கி சான் பொதுமக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.

ஜாக்கி சான் அப்போது "என் மகன் தனது செயல்களால் வெட்கப்படுகிறேன். இது எனது தோல்வி, எனவே இந்த விஷயத்தில் நான் அவரை பாதுகாக்க மாட்டேன்" என கூறினார்: இன்ஸ்டாகிராமில் கங்கனா இந்த செய்தி அடங்கிய மீமை பகிர்ந்து ஷாருக்கானை குறிவைப்பதாக தெரிகிறது.கங்கனா ரனாவத் இந்த மீமை  #justsaying என்ற ஹேஷ்டேக்கில் பகிர்ந்துக்கொண்டார்.

ஷாருக்கான் மகன் ஆர்யன்கானை ஆதரிக்கும் மற்ற நடிகர்களையும் கங்கனா ரனாவத் விமர்சித்தார், "நாம் அனைவரும் தவறு செய்கிறோம். ஆனால் தவறு செய்பவர்களை மகிமைப்படுத்தாதீர்கள். அனைத்து மாஃபியாக்களும்  ஆர்யன் கானை பாதுகாக்க முயற்சிக்கின்றனர். ஆர்யன் செய்த தவறை புரிந்துகொள்ள இந்த சம்பவம் உதவட்டும்.

அவர் ஒரு சிறந்த மனிதராக மாறட்டும் என கங்கனா ரனாவத் இன்ஸ்டாகிராமில் கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Actress Kangana Ranaut target Actor Shah Rukh Khan

People looking for online information on Aryan Khan, Jackie Chan, Kangana Ranaut, Shahrukh Khan will find this news story useful.