VIDEO: ஊரே புயல் அடிக்குது .. இதுல இப்படி ஒரு PHOTOSHOOT-ஆ? .. தெறிக்கவிட்ட நடிகை... கடுப்பான நெட்டிசன்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அரபிக்கடலில் உருவான புயல் கடந்த திங்கள்கிழமை கரையை கடந்தது. இந்தநிலையில் Tauktae புயல் காரணமாக பல மாவட்டங்களில் பேய்மழை அடி அடி என அடித்து ஊற்றியது.

குறிப்பாக மும்பை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடுமையான மழை பெய்தது. இந்த புயல் Tauktae தாக்கம் அதிக சேதத்தை உருவாக்கி இருக்கிறது. இந்த சேதத்தை தொடர்ந்து 12 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இவர்களை மீட்கும் பணியும் புயலில் மேலும் பாதிக்கப் பட்டவர்களை மீட்கும் பணியும் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு பணியில் இறங்கி இருக்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல் இந்த புயல் குஜராத் மற்றும் கர்நாடகாவிலும் பெரிய அளவிலான சேதத்தை உண்டாக்கியது. எக்கச்சக்கமான சேதங்களை உண்டாக்கிய இந்த புயலால் நாட்டின் நிதி தலைநகரமான மும்பை பெரிதளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. மும்பையில் சூறைக்காற்றும் மழையும் சுற்றிச் சுற்றி அடித்து இருக்கின்றன.  அதுவும் 24 சென்டி மீட்டருக்கு மழையும் 114 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றும் பதிவாகியுள்ளன. கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டதுடன் அதிக மரங்கள் சாய்ந்து இருக்கின்றன. இந்த நிலையில்தான்  அப்படி மழை புயலில் வேரோடு சாய்ந்த மரத்தினிடையே நின்றுகொண்டு வைரலான போட்டோ ஷூட் ஒன்றை செய்து இருக்கிறார் நடிகை ஒருவர்.

அவர்தான் நடிகை தீபிகா சிங். இதனை பார்த்த பலரும் இப்படியான ஒரு சூழ்நிலையில் போட்டோஷுட்டில் எடுப்பதெல்லாம் நியாய தர்மமா என்று கடுப்பாகி கேள்விகளை எழுப்பி  வருகின்றனர்.  அத்துடன் சாலையில் இருக்கும் இந்த மரங்களுக்கு நடுவே ஆளில்லாமல் தனியாக ஒரு இந்தி பாட்டுக்கு டூயட்டையும் ஆடியிருக்கிறார் தீபிகா. இதற்கு கொந்தளித்து ரியாக்சன் செய்த ரசிகர்களுக்கு தீபிகா சிங் கோயல் பதிலளித்திருக்கிறார்.

அதில்,“நீங்கள் புயலை அமைதிப்படுத்த முடியாது, எனவே அதை முயற்சி செய்வதை நிறுத்துங்கள். நீங்கள் என்ன செய்ய முடியும் என்பது செய்யுங்கள். உங்களை அமைதிப்படுத்துங்கள், இயற்கையையும் அதன்  இருண்ட சூழலையும் தழுவுங்கள், ஏனெனில் புயல் கடந்து செல்லும் .. இந்த மரம் என் வீட்டிற்கு வெளியே விழுந்தது யாருக்கும் காயம் ஏற்படவில்லை, ஆனால் அதை எங்கள் வீட்டு வாசலில் இருந்து விலக்கி வைக்கும் போது, ​​ரோஹித்தும் நானும் இந்த புயலை நினைவில் வைத்துக் கொள்ள சில படங்களை எடுக்க முடிந்தது!” என குறிப்பிட்டுள்ளார்.

VIDEO: ஊரே புயல் அடிக்குது .. இதுல இப்படி ஒரு PHOTOSHOOT-ஆ? .. தெறிக்கவிட்ட நடிகை... கடுப்பான நெட்டிசன்கள்! வீடியோ

Actress Deepika Singh Goyal trending pic amid cyclone tree

People looking for online information on Cyclonetauktae, DeepikaSingh, DeepikaSinghGoyal will find this news story useful.