"பலி ஆடாக இருந்து உயிர் பிழைத்துள்ளேன்" - பரபர அறிக்கை விட்ட பாவனா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொச்சி: நடிகை பாவனா நடிகர் திலீப் மீதான வழக்கு பற்றி இன்ஸ்டாகிராமில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

2017 ஆம் ஆண்டு ஒரு கும்பல் பிரபல நடிகையை காரில் கடத்திய சம்பவம் கேரளா மட்டுமல்லாது தென்னிந்தியா முழுவது பரபரப்பை கிளப்பியது . இதில் முக்கிய குற்றவாளியாக  நடிகர் திலீப், பல்சர் சுனி ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். 74 நாட்கள் சிறையில் இருந்த திலீப், ஜாமீனில் சிறையிலிருந்து வெளியே வந்தார். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது.

சில நாட்களுக்கு முன் நடிகர் திலீப்பின் நண்பரும் மலையாள இயக்குனருமான பாலசந்திரகுமார் இந்த சம்பவத்தில் நடிகர் திலீப்க்கு உள்ள தொடர்பு குறித்து பல தகவல்களை வெளியிட, இந்த வழக்கு மீண்டும் சூடுபிடித்தது. இயக்குனர் பாலசந்திர குமாரும், நடிகையும் கேரள முதல்வருக்கு கடிதம் எழுத விசாரனை முடுக்கி விடப்பட்டது. வரும் ஜனவரி மூன்றாம் வாரத்திற்குள் விசாரணையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க போலிஸ் தரப்பு முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே இந்த வழக்கின் விசாரணையை வரும் பிப்ரவரிக்குள் முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் எர்ணாகுளம் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் நடிகர் திலீப் மீதும் போலீஸ் புதிய வழக்காக, விசாரணை செய்த போலீஸ் அதிகாரியின் கையை வெட்டுவேன் என கூறி ஆபத்தை ஏற்படுத்த திலீப் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூடுதல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அழகி படம் உருவாக இது தான் காரணம்... 20 வருடம் கழித்து மனம் திறந்த இயக்குனர் தங்கர் பச்சான்!

இந்நிலையில் நடிகை பாவனா தனது இன்ஸ்டாகிராமில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "இது எளிதான பயணம் அல்ல. பலி ஆடாக இருந்து தப்பிப்பிழைக்கும் பயணம் இது. ஐந்து ஆண்டுகளாக, என் பெயரும் எனது அடையாளமும் என் மீது சுமத்தப்பட்ட தாக்குதலின் பாரத்தால் அடக்கப்பட்டுள்ளன. குற்றம் செய்தது நான் இல்லை என்றாலும், என்னை அவமானப்படுத்தவும், அமைதியாகவும், தனிமைப்படுத்தவும் பல முயற்சிகள் நடந்துள்ளன.

ஆனால் அப்படிப்பட்ட சமயங்களில் என் குரலை உயிர்ப்புடன் வைத்திருக்க சிலர் முன்வந்திருக்கிறார்கள். இப்போது எனக்காகப் பல குரல்கள் பேசுவதைக் கேட்கும்போது, ​​நீதிக்கான இந்தப் போராட்டத்தில் நான் தனியாக இல்லை என்பது எனக்குத் தெரியும். நீதி நிலைநாட்டப்படவும், தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படவும், வேறு யாரும் இதுபோன்ற சோதனைக்கு ஆளாகாமல் இருக்கவும் இந்தப் பயணத்தைத் தொடர்கிறேன். என்னுடன் நிற்கும் அனைவருக்கும் - உங்கள் அன்புக்கு மனமார்ந்த நன்றி."- என பாவனா மேனன் குறிப்பிட்டுள்ளார்.

தன நன நன நா.. இதான் "வேதா"! 'விக்ரம் வேதா' இந்தி ரீமேக்கின் பக்கா மாஸான FIRST LOOK!

 

 

தொடர்புடைய இணைப்புகள்

Actress Bhavana Instagram Viral Post on Actor Dhilip

People looking for online information on Actor Dhilip, Actress Bhavana, திலீப், பாவனா, Malayalam will find this news story useful.