நடிகர் சூரியிடம் 2.70 கோடி மோசடி... நடந்தது என்ன... நடிகர் விஷ்ணு வெளியிட்ட அவசர அறிக்கை..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சூரி தற்போது அடையார் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை எழுப்பியுள்ளார். அதாவது நிலம் வாங்கி தருவதாக தன்னிடம் 2.70 கோடி மோசடி செய்ததாக தயாரிப்பாளர் உட்பட மூன்று பேர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இதில் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை பெயரும் இடம் பெற்றுள்ளதாக சில செய்திகள் வெளியாகின. இந்நிலையில் நடிகர் விஷ்ணு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

அதில் "என் மீதும் என் தந்தை மீதும் வைக்கப்பட்டிருக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளைப் பற்றிப் படித்தது மிகுந்த அதிர்ச்சிகரமாகவும், வருத்தமாகவும் இருந்தது. சிலர் உள்நோக்கத்துடன் செயல்படுவது கண்கூடாகத் தெரிகிறது. உண்மையில் திரு. சூரி, விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸுக்கு ஒரு அட்வான்ஸ் பணத்தைத் திரும்பத் தர வேண்டும். "கவரிமான் பரம்பரை" என்ற படத்துக்காக 2017ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட பணம் அது, சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது.

சட்டத்தின் மீதும் நீதித் துறையின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த நேரத்தில் இது பற்றி இன்னும் விரிவாகப் பேசுவது சரியாக இருக்காது. நாங்கள் சட்டம் அனுமதிக்கும் பாதையில் செல்வோம். உண்மை வரும்வரை ரசிகர்களும், நல விரும்பிகளும் காத்திருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். மேலும் உண்மையான தகவல்களுடன் இது பற்றி செய்தி வெளியிட வேண்டும் என்று ஊடகங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். எல்லாம் தெளிவான பிறகு சட்டப்படி சரியான நடவடிக்கையை நான் எடுப்பேன்" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actor vishnu vishal gives explanation on soori complaint சூரி குற்றச்சாட்டு, விஷ்ணு விஷால் அறிக்கை

People looking for online information on Soori, Vishnu Vishal will find this news story useful.