"ரொம்ப மகிழ்ச்சியான இரண்டு ரோல்".. இயக்குனர் மணிரத்னத்துக்கு நன்றி சொன்ன விக்ரம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் மணிரத்னத்துக்கு நன்றி சொல்லி சீயான் விக்ரம் ட்வீட் செய்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | THUNIVU: 'துணிவு' படத்தின் ப்ரோமோ பாடல்.. களமிறங்கும் பிரபல நடன இயக்குனர்! தெறி அப்டேட்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில், விக்ரம் நடித்திருந்த கோப்ரா திரைப்படம், கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதியன்று வெளியாகி இருந்தது.  இதனைத் தொடர்ந்து,  பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம், கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகி இருந்தது. இதில், ஆதித்த கரிகாலன் என்னும் கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்திருந்தார்.  இந்த பொன்னியின் செல்வன் படம் உலகம் முழுவதும் 450 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இதையடுத்து இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில், பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி ஆகியோரும் நடிக்கின்றனர். 

இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார். ஒளிப்பதிவை கிஷோர் குமாரும், படத்தொகுப்பை செல்வாவும் கவனித்துக்கொள்கின்றனர். எஸ்.எஸ்.மூர்த்தி கலை இயக்குனராக பணிபுரியும் இந்தப் படத்தில் ஏகன் ஏகாம்பரம் ஆடை வடிவமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் மணிரத்னத்துக்கு நன்றி சொல்லி சீயான் விக்ரம் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு  பதிவிட்டுள்ளார். அதில்,  "இவ்வளவு அன்பான வார்த்தைகளுக்கு நன்றி குருவே, எனது மிகவும் மகிழ்ச்சிகரமான இரண்டு பாத்திரங்களை எனக்கு வழங்கியதற்காக. வீரா & ஆதித்த கரிகாலன் & மேலும் என்னைத் தூண்டியதற்காகவும். #ராவணன் #பொன்னியின் செல்வன்" என ட்வீட் செய்துள்ளார்.

 

Also Read | தனது தம்பியின் பிறந்தநாளை கொண்டாடிய மாளவிகா மோகனன்.. அவரே வெளியிட்ட வைரல் போட்டோஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

Actor Vikram Thanks Maniratnam for Ponniyin Selvan PS1 Raavan

People looking for online information on Maniratnam, Ponniyin Selvan 1, Vikram will find this news story useful.