சாலை விபத்தில் ரசிகர் உயிரிழப்பு.. நேரில் சென்று நடிகர் சூர்யா ஆறுதல்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சாலை விபத்தில் உயிரிழந்த ரசிகரின் வீட்டுக்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய நடிகர் சூர்யாவின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

கடந்த வாரம் 22-ம் தேதி சூர்யா ரசிகர் மன்ற நாமக்கல் மாவட்ட செயலாளர் ஜெகதீஷ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இதைக் கேள்விப்பட்ட நடிகர் சூர்யா, நாமக்கல்லில் உள்ள ஜெகதீஷ் வீட்டிற்கு நேரில் சென்றார்.

அங்கு ஜெகதீஷ் படத்திற்கு கண்ணீர் மல்க சூர்யா அஞ்சலி செலுத்தினார். மேலும், ஜெகதீஷ் மனைவி ராதிகா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

சூர்யாவின் வருகையை அறிந்த ஏராளமான பொதுமக்கள் அவரைப் பார்ப்பதற்காக அங்கு திரண்டனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Fan, Surya

தொடர்புடைய இணைப்புகள்

Actor Surya visit his fans house who died in accident

People looking for online information on Fan, Surya will find this news story useful.