"இனி யாருக்குமே இப்படி நடக்கக் கூடாது!".. நடிகைக்கு நேர்ந்த கொடுமை.. சூர்யா உருக்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சூர்யா நடிப்பில், நாளை (10.03.2021) திரையரங்குகளில் வெளியாகவுள்ள திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'.

Advertising
>
Advertising

முத்தம் கொடுத்த திவ்யபாரதி! சொக்கிப்போன ரசிகர்கள்... படு வைரல் ஆகும் நைட் பார்ட்டி வீடியோ

இந்த திரைப்படத்தை, பாண்டிராஜ் இயக்கியுள்ளார். சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ள நிலையில், வினய், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இமான் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் அதிகம் ஹிட்டடித்து வருகிறது.

சுமார் இரண்டரை ஆண்டுகள்

அது மட்டுமில்லாமல், சூர்யா நடிப்பில் சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு, ஒரு திரைப்படம் தியேட்டரில் வெளியாகவுள்ளது. இதற்கு முன்பு அவரின் நடிப்பில் வெளியாகியிருந்த 'சூரரைப் போற்று' மற்றும் 'ஜெய்பீம்' ஆகிய இரண்டு திரைப்படங்களும், ஓடிடி தளத்தில் வெளியாகியிருந்தது. கடைசியாக 'காப்பான்' திரைப்படம் தான், கடந்த 2019 ஆம் ஆண்டில், திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.

கேரளாவில் சூர்யா

இதனால், நாளைய தினத்தை எதிர்நோக்கி, சூர்யா ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். இதனிடையே, எதற்கும் துணிந்தவன் படத்தின் ப்ரோமோஷன் தொடர்பாக, நடிகர் சூர்யா கேரள சென்றிருந்தார். அப்போது நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது.

எப்போது மலையாளத்தில் நடிப்பீர்கள்?

அதில், மலையாள நடிகர்கள் பலர் தமிழ் சினிமாவில் நடித்து வரும் நிலையில், தமிழ் நடிகர்கள் எப்போது மலையாள சினிமாவில் நடிப்பார்கள் என்ற கேள்வியை ஒருவர் முன் வைத்தார். இதற்கு பதிலளித்த சூர்யா, "கதை சொன்னால் நிச்சயம் நாங்கள் நடிக்க தயாராக இருக்கிறோம். மலையாள சினிமா மீது, எங்களுக்கு அன்பும், மதிப்பும் உள்ளது. இதனால், வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்போம்" என தெரிவித்தார்.

நடிகை மீது பாலியல் துன்புறுத்தல்

அதே போல, ஒரு பெண் பத்திரிகையாளர், "கடந்த சில ஆண்டுகளுக்கு முன், மலையாள நடிகை ஒருவரை கடத்தி பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் நடந்ததாக வழக்கு உள்ளது. நீங்கள் அதை கேள்விப்பட்டிருப்பீர்கள். அது பற்றி உங்கள் கருத்து என்ன?" என கேட்டார்.

யாருக்கும் நடக்கக் கூடாது

இதற்கு பதிலளித்த சூர்யா, "இங்கு என்ன நடந்தது என்பதை நாங்கள் அனைவரும் கவனித்துக் கொண்டிருந்தோம். அந்த வழக்கு குறித்து எனக்கு முழு தகவல்களும் தெரியாது. அதனால், அதனை பற்றி ஆழமாக பேசவில்லை. இருந்தும், அப்படி நடந்தது மிகவும் நியாயமற்றது. நம்முடைய சமுதாயத்தில், எந்தவொரு பெண்ணுக்கும் அப்படி நடக்கக் கூடாது. இப்படி ஒரு நவீன காலத்திலும், இந்த மாதிரி விஷயங்கள் நடக்கவே கூடாது. இனிமேல் நடக்காமல் பார்த்துக் கொள்வோம்" என சூர்யா கூறினார்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது, இயக்குனர் பாண்டிராஜ், நடிகர் சூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உங்கள முதல் தடவ 'முழுசா' பாத்த 'லக்கி Guy' யாரு?.. ரசிகர் கேட்ட கேள்வி.. கூலா பதில் சொன்ன Bigg Boss பிரபலம்

தொடர்புடைய இணைப்புகள்

Actor Suriya opens up about kerala actress molestation case

People looking for online information on Actor Suriya, எதற்கும் துணிந்தவன், நடிகர் சூர்யா, Etharkkum Thunindhavan, Kerala actress, Molestation case will find this news story useful.