"கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன்" - நடிகர் சூர்யா பதிவு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலைத் தடுக்க கடந்த வருடம் கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் கடுமையான ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் பலரும் தங்கள் வேலை தொழில்களுக்குத் திரும்பியுள்ளனர். இந்நிலையில் நடிகர் சூர்யா தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் ‘‘’கொரோனா  பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும்  உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்.’’ எனக் கூறியுள்ளார். இந்த செய்தி அவரது ரசிகர்களுக்குச் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. சமீபத்தில் இவர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்த 'சூரரைப் போற்று' படம் மாபெரும் வெற்றி அடைந்தது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது. அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா. இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இந்த படத்திற்குத் தற்சமயம் 'சூர்யா 4௦' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு  பிறகு இயக்குனர் வெற்றிமாறன் சூர்யா முதன்முறையாக இணையும் 'வாடிவாசல்' படத்தின் படப்பிடிப்புகள் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Suriya

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actor suriya emotional post after corona கொரோனா பாதிப்பு குறித்து சூர்யா பதிவு

People looking for online information on Suriya will find this news story useful.