‘மாநகரம்’ ஹீரோவுக்கு முகத்தில் கண்ணாடி வெட்டு - ஷூட்டிங் ஸ்பாட்டில் விபரீதம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் ‘மாநகரம்’, ‘மாயவன்’, ‘நெஞ்சில் துணிவிருந்தால்’, ‘நரகாசூரன்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள சந்தீப் கிஷனுக்கு, ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்து பரபரப்பை ஏற்படுத்தியது.

தெலுங்கில் சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள Ninnu Veedani Needanu Nene என்ற திரைப்படம் ரிலீஸாகவுள்ள நிலையில்,  நாகேஸ்வர ரெட்டி இயக்கத்தில் தெனாலி ராமகிருஷ்ணா என்ற படத்தில் சந்தீப் கிஷன் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில், ஸ்டண்ட் காட்சியின் போது, சந்தீப் கிஷன் முகத்தில் இடது கண்ணிற்கு கீழ் கண்ணாடி பீஸ் கிழித்து ரத்தம் கொட்டியதால் ஷூட்டிங் ஸ்பாட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

அதையடுத்து, கர்னூலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்ட சந்தீப் தற்போது நலமாக இருப்பதாக அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தின் போது ஸ்டண்ட் மேன் ஒருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் ட்வீட் செய்திருந்தார்.

மேலும், இந்த விபத்திற்கு காரணம் ஸ்டண்ட் இயக்குநர் தான் என்று பரவிய வதந்தியையும் நடிகர் சந்தீப் கிஷன் தனது ட்வீட்களில் மறுத்துள்ளார்.

Actor Sundeep Kishan gets injured while shooting stunt sequence

People looking for online information on Ninnu Veedani Needanu Nene, Stunt Sequence, Sundeep Kishan will find this news story useful.