''ரூ.15 வாடகை கொடுத்து வாழ்ந்த வீடு...'' - இடிந்து சேதாரமாக இருக்கும் வீடு முன் நடிகர் சிவக்குமார்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹீரோவாகவும், குணச்சித்திர நடிகராகவும் தமிழ் சினிமாவில் நூற்றுக்கணக்கான படங்களின் மூலம் நம்மை மகிழ்வித்தவர் நடிகர் சிவகுமார். திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சித்தி உள்ளிட்ட டிவி சீரியல்களிலும் தனது யதார்த்தமான நடிப்பின் ரசிகர்களை கவர்ந்தவர். அவர் மிகச் சிறந்த ஓவியர் என்பது அனைவரும் அறிந்ததே.

Advertising
Advertising

அவரது மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கிறார்கள். மகள் பிருந்தா பாடகராக சந்திரமௌலி, ராட்சசி, ஜாக்பாட் என தொடர்ச்சியாக கலக்கி வருகிறார். இந்நிலையில் அவர் தனது தொடக்க காலத்தில் சென்னை புதுப்பேட்டையில் வாழ்ந்த வீட்டின் முன் நிற்கும் புகைப்படத்துடன் பகிர்ந்து அதுகுறித்து மனம் திறந்துள்ளார்.

அதில், 1958 -1965  மாதம் 15/- ரூபாய் வாடகை கொடுத்து வாழ்ந்த புதுப்பேட்டை வீடு...7 ஆண்டுகள் இந்த வீட்டில் வாழ்ந்தபோது வரைந்தவை, எனது அத்தனை ஓவியங்களும்... ஓவியக்கல்லூரியில் 6 ஆண்டுகள், அதற்கு முன் மோகன் ஆர்ட்ஸில் 1 வருடம்... இந்தியாவில் டெல்லி முதல் கன்யாகுமரி வரை சுற்றி ஓவியம் தீட்ட அக்காலத்தில் ஆன மொத்த செலவு ரூ.7500/- ..குறைந்த தேவைகளுடன் உயர்ந்த லட்சியத்துடன் வாழ்ந்த நாட்கள் பொன்னான நாட்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actor Sivakumar shares early life memories in chennai ft Suirya, Karthi | சென்னையில் தனது துவக்க கால நினைவுகளை பகிர்ந்த சிவகுமார்

People looking for online information on Karthi, Sivakumar, Suriya will find this news story useful.