பாக்கியலட்சுமி சீரியல்.. பைக்கில் எண்ட்ரி கொடுத்த ரஞ்சித்.. மோதி விழுந்த பாக்யா.. BAAKIYALAKSHMI

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல் பாக்கியலட்சுமி சீரியலில் நடிகர் ரஞ்சித் எண்ட்ரி கொடுத்துள்ளார். 

Advertising
>
Advertising

ராதிகாவின் முயற்சி

முன்னதாக ராதிகா வேலை செய்யும் ஆபீஸில் மேனேஜர், “நம் ஆபீஸில் கேட்டரிங் ஆர்டரில் ஃபுட் பாய்சன் நடந்து 10 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளார்கள். அன்று அலுவலகத்துக்கு வந்த பாக்கியலட்சுமிக்கு கேட்டரிங் காண்ட்ராக்ட் கொடுத்திருக்கலாம். நீங்கள் சொன்னதால் நான் கொடுக்கவில்லை” என ஆதங்கமாக பேசுகிறார்.

அப்போது ராதிகாவோ, அவங்க சமைத்தால் மட்டும் தப்பு வராதுனு என்ன சார் கேரண்டி என கேட்கிறார். அதற்கு அந்த மேனேஜரோ, பெண்கள் லாப நோக்கத்தில் வேலை செய்ய மாட்டார்கள். தாங்கள் சமைத்ததை அனைவரும் விரும்பி சாப்பிட்டு நல்லாருக்கு என சொல்வதையே முதன்மையாக கொண்டு பணிபுரிவார்கள் என்றார்.

காண்ட்ராக்ட்டை கைப்பற்றிய பாக்யா

ஆனாலும் ராதிகா விடாப்பிடியாக ஏலம் விடலாம் சார், அதன் மூலம் நம்ம டீம் கிடைப்பார்கள். ஒரு தப்பான அனுபவத்தை வைத்துக்கொண்டு இந்த முடிவுக்கு வர வேண்டாம் என சொல்கிறார். இதை கேட்ட மேனேஜர், உங்களுக்கும் பாக்கியாவுக்கும் எதேனும் சண்டைடா? என வினவ, அதற்கு ராதிகா அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என சொல்லிவிட்டு செல்கிறார்.

ஆனாலும் மேனேஜர் சந்தேகமாக பார்க்கிறார். இதனை அடுத்து ராதிகா வேலை பார்க்கும் கம்பெனியில் சமையல் காண்ட்ராக்ட் ஏலம் விடப்படுகிறது. இங்கும் பாக்கியலட்சுமி வந்து கலந்து கொள்ள அவரை முதலில் எளப்பமாக ராதிகா நடத்துகிறார்.

பின்னர் பாக்கியலட்சுமி அந்த கான்ட்ராக்ட்டை தன்னுடைய நேர்மையான பேச்சினாலும் குறைவான விலையில் தரமான உணவை தனது ஈஸ்வரி கேட்டரிங் காண்ட்ராக்ட் தர முடியும் என்று கொடுத்த நம்பிக்கையினாலும் அந்த காண்ட்ராக்டை பெறுகிறார். அதன் பிறகு பாக்கியலட்சுமியிடம் ஆங்கிலத்தில் கேள்விகளை கேட்டு திணறடிக்கிறார் ராதிகா.

பாக்யாவின் பதிலடி

முதலில் தட்டு தடுமாறி ஆங்கிலத்தில் பதில் சொன்ன பாக்கியலட்சுமி பிறகு ராதிகாவிடம், “பிறக்கும் பொழுதே யாரும் எல்லா விஷயங்களையும் கற்றுக் கொள்வதில்லை. தேவை என்று வரும்போதுதான் கற்றுக் கொள்கிறார்கள்.

படிப்புக்கும் நாகரீகத்திற்கும் சம்பந்தம் இருக்கு என்று சொல்கிறார்கள். ஆனால் சிலர் அப்படி நடந்து கொள்வதில்லை. அதுபோன்றுதான் இதுவும்” என்று பதிலடியாக பேசுகிறார். இதனால் ராதிகாவின் முகம் கலவரம் ஆகிறது. இனி ராதிகா பாக்கியலட்சுமி இடையிலான சண்டை இந்த சீரியலை இன்னும் சுவாரசியமாக எடுத்துச் செல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

நடிகர் ரஞ்சித் எண்ட்ரி

இந்நிலையில்தான் பாக்யா அதிரடி முடிவாக, ஆங்கிலம் கற்றுக்கொள்ளும் வகுப்பில் இணைந்துள்ளார். பிஸினஸில் நிறைய பேரை சந்திக்க வேண்டும் என்பதால், தான் சரளமாக ஆங்கிலம் பேச வேண்டும் என குறிப்பிட்டு ஆங்கில வகுப்பில் சேரும் பாக்யா, 6 மாதம் இனி இந்த ஆங்கில வகுப்பில் கலந்துகொள்ளவிருக்கிறார். பல தடைகளை தாண்டி இந்த வகுப்புக்கு தினமும் காலையில் செல்ல வேண்டும்.

இதை பற்றி பேசிமுடித்துவிட்டு எழிலிடம் அப்டேட் செய்துகொண்டே வீடு திரும்ப முயற்சித்த பாக்யா எதிரில் வந்த ஒரு பைக் மீது மொதி கீழே விழுந்தார். எதிரில் வந்தது வேறு யாரும் அல்ல, பிரபல நடிகர் ரஞ்சித் தான்.  இவர் முன்னதாக விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே சீரியலில் நாயகனாக நடித்தார்.

90கள் முதலே பல படங்களில் ஹீரோவாகவும், பல திரைப்படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்த திரைப்பட நடிகர் ரஞ்சித், நிஜவாழ்வில் தான் பிரிந்து வாழ்ந்த திரைப்பட நடிகை ப்ரியா ராமனுடன் மீண்டு இல்வாழ்வில் இணைந்தார். இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் எண்ட்ரி கொடுத்துள்ள நடிகர் ரஞ்சித், அதில் தொடருவாரா? இல்லை ஒரு சில காட்சிகளுக்கு வந்துள்ளாரா? என ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

Also Read : குடும்பத்தை ரெண்டாக்கிய அர்ஜூன்.. கொந்தளித்த கோதை.. எச்சரித்து வெளியேறிய தமிழ்..

தொடர்புடைய இணைப்புகள்

Actor Ranjith entry in Baakiyalakshmi serial update

People looking for online information on Baakiyalakshmi, Baakiyalakshmi serial prpmo, Baakiyalakshmi serial today, Baakiyalakshmi serial update will find this news story useful.