"எனக்கு அழுகையா வருது".... வேதனையுடன் புகழ் வெளியிட்ட பதிவு... சோகத்தில் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சி வாராவாரம் சுவாரசியம் குறையாமல் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. கோமாளிகள் மட்டுமல்லாது போட்டியாளர்களும் சேர்ந்துகொண்டு செய்யும் ரகளைகள் வயிற்றைப் பதம் பார்க்கின்றன. அதிலும் பலரைப் பற்றி மக்கள் வைத்திருக்கும் பிம்பமே இந்த சீசன் 2 மூலமாக மாறியுள்ளது. சீரியஸான மனிதர்களாக இருப்பார்கள் என்று நினைத்த பலரும் மிகவும் எளிமையான, சுவாரசியமான, ரசிக்கக்கூடிய மனிதர்களாக இருப்பதை பார்க்க முடிகிறது. அதேபோல் கோமாளிகளுடன் போட்டியாளர்கள் பழகும் விதமும் ரசிக்கும்படி உள்ளது.

கடந்த வாரம் நடந்த வைல்டு கார்டு சுற்றில் மதுரை முத்து, பவித்ரா, தர்ஷா குப்தா, தீபா, ஷகிலா மற்றும் ரித்திகா பங்கு பெற்றுள்ளனர். இந்நிலையில் இந்த கடினமான போட்டியில் வென்று யார் அந்த பிரமாண்ட பைனல்ஸ் சுற்றுக்கு செல்வார்கள் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்திருக்கின்றனர். ஏற்கனவே அஸ்வின், கனி மற்றும் பாபா பாஸ்கர் மூவரும் கடைசி சுற்றுக்கு நேரடியாக தேர்வாகியிருந்தனர். இந்நிலையில் நடிகை ஷகிலா மற்றும் பவித்ரா இருவரும் வைல்டு கார்டு போட்டியில் வென்றனர்.

இந்நிலையில் இந்த வாரம் குக் வித் கோமாளி இரண்டாம் சீசனின் பைனல்ஸ் நடைபெற இருக்கிறது. இந்த பைனலில் யார் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருந்தாலும், இந்த நிகழ்ச்சி முடிவடையப் போகிறது என்கிற ஏக்கம் தான் பலரது முகத்திலும் பார்க்கமுடிகிறது. இந்நிலையில் குக் வித் கோமாளியின் செல்லப்பிள்ளையான புகழ் தற்பொழுது ஒரு பதிவிட்டுள்ளார். அவர் கூறும் பொழுது மிஸ் யூ மக்களே. எனது வித் கோமாளி டீம்.  ரொம்ப கஷ்டமா இருக்கு. அழுகையா வருகிறது" என்று வேதனையுடன் இந்த பதிவை அவர் வெளியிட்டுள்ளார்.

Tags : Pugazh

தொடர்புடைய இணைப்புகள்

Actor pugazh heartmelting post after CWC finals வேதனையுடன் புகழ் வெளியிட்ட பதிவு

People looking for online information on Pugazh will find this news story useful.