ஆயிரத்தில் ஒருவன் கூட்டணி.., மீண்டும் இணைகிறார்களா..?! - சோழ மன்னர் சொல்லும் புதிய தகவல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் பார்த்திபன் மீண்டும் கார்த்தியுடன் இணைந்து நடிப்பது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

பிருத்விராஜ், பிஜு மேனன் நடிப்பில் வெளியாகி மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். இத்திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பாளர் கதிரேசன் வாங்கியுள்ளார். இத்திரைப்படத்தில் முதலில் சசிகுமார் மற்றும் சரத்குமார் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. பின்னர் ஆர்யா இப்படத்தில் நடிப்பதாகவும் செய்திகள் கிளம்பின.

இதனிடையே அய்யப்பனும் கோஷியும் படத்தின் இயக்குநரான மறைந்த சச்சி, தமிழ் ரீமேக்கில் கார்த்தியும் பார்த்திபனும் நடித்தால், நன்றாக இருக்கும் என தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து, தற்போது இத்திரைப்படத்தில் கார்த்தி மற்றும் பார்த்திபனை நடிக்க வைக்க படக்குழு முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வந்தன. 

இதை தொடர்ந்து நடிகர் பார்த்திபன் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ''இச்செய்தி நற்செய்தி ஆகலாம்!ஆனால் இதுவரை தயாரிப்பாளர் திரு கதிரேசனை தவிர அனைவரும் என்னிடம் பேசிவிட்டார்கள். எனவே...'' என பதிவிட்டுள்ளார். ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் இணைந்து கலக்கிய கார்த்தி-பார்த்திபன் கூட்டணி, மீண்டும் சேர்ந்து நடித்தால் கொண்டாட்டம்தான் என ரசிகர்கள் ட்ரெண்ட் அடித்து வருகின்றனர். 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

கார்த்தியுடன் மீண்டும் இணையும் பார்த்திபன் | Actor Parthiban opens on joining with karthi for that remake film

People looking for online information on Ayyappanum Koshiyum, Ayyappanum Koshiyum Remake, Karthi, Radhakrishnan Parthiban will find this news story useful.