கேப்டனுடன் த்ரோபேக் ஃபோட்டாவை பகிர்ந்த நதியா! என்ன சொல்லிருக்கார் பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

80களின் தொடக்கங்களில் சினிமா ரசிகர்களை தன் இயல்பான நடிப்பால் தன் பக்கம் ஈர்த்தவர் நடிகை நதியா.

நதியா நாயகியாக நடிக்கும் படங்களுக்கு அப்போது பெரிய அளவில் மார்க்கெட் இருந்தது. உச்ச நட்சத்திரங்களாக இருந்த ரஜினி, மோகன், பிரபு, சிவகுமார்,விஜயகாந்த் உள்ளிட்டவர்களின் படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்த நதியா ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவிற்கு சென்று விட்டார். அவருடைய அமெரிக்கா பயணம் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது.

2000-வது ஆண்டுகளில் மீண்டும் இந்தியா வந்த நதியா தென்னிந்திய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிந்து வந்தார். இந்நிலையில், கடந்த 34 ஆண்டுகளுக்கு முன்பு விஜயகாந்த் உடன் தான் "பூமழை பொழியுது", திரைப்படத்தில் நடித்தபோது எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தன் அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

அதில், "விஜயகாந்துடன் நான் நடித்த முதல் படம் "பூமழை பொழியுது". அழகப்பன் இயக்கிய இந்த படத்திற்கு ஆர்.டி.பர்மன் இசையமைத்தார். இந்த படத்தில் தான் முதன்முதலாக வெளிநாட்டிற்கு சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். ஜப்பான், ஹாங்காங் நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற்றது" என்று பதிவிட்டுள்ளார் நதியா. இவருடைய பதிவு தற்போது அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

 

தொடர்புடைய இணைப்புகள்

Actor Nadia shared a photo with Vijaykanth on Instagram

People looking for online information on Nadhiya, Vijayakanth will find this news story useful.