"இது ஒரு குத்தமாயா!?".. LOCKDOWN-ல நடந்தது இதான்! தீயாய் பரவிய வீடியோ.. மனோபாலா வைரல் ரியாக்‌ஷன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அண்டை மாநிலங்கள், சென்னை மற்றும் தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே ஊரடங்கும், தளர்வுகளும் தொடர்ந்தபடி வந்தன.

Advertising
>
Advertising

இந்நிலையில் தற்போது மீண்டும், தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் கூடிய இரவு நேர ஊரடங்கு, ஞாயிறுகளில் முழு நேர ஊரடங்கு உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த அறிவிப்புகள் கடந்த வாரங்கள் வெளியானதும் பலரும் தங்கள் அடுத்தடுத்த பணிகளை திட்டமிட்டுக் கொண்டனர்.

எனினும் சிலரால் திடீரென திட்டமிட முடியாத சூழலும் ஏற்பட்டது. இதனிடையே திரைப்பட நடிகர்கள் ரவி மரியா மற்றும் இயக்குநர், நடிகர் மனோபாலாவை கூடலூர் பகுதியில் பொதுவெளியில் கண்டதாக சில செய்திகளும் இணையவழிகளில் வெளியாகி வந்தன. அதன்படி இயக்குநர் மனோபாலாவும், நடிகர் ரவி மரியாவும் ஊரடங்கு நேரத்தில் உணவகங்களை தேடி சிரமப்பட்டதாக  வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வலம் வந்தன.

தற்போது இந்த செய்திகளுக்கு ரியாக்ட் செய்துள்ள நடிகர் மனோபாலா, தமது ட்விட்டரில் இந்த செய்திகளை பதிவிட்டு, “சும்மா சாப்பிட போனது ஒரு குத்தமா?” என பதிவிட்டுள்ளார். எப்போதும் தமக்கே உரிய நகைச்சுவையான பேச்சினாலும் இயல்பினாலும் அனைவரிடத்திலும் அன்பும் நட்பும் பாராட்டும் நடிகர் மனோபாலா, இந்த தகவல்கள் குறித்த தம் பதிலையும் தனக்கே உரிய பாணியில் தந்துள்ளார் என ரசிகர்கள் நெகிழ்ந்துள்ளனர்.

இயக்குநர், நடிகர் என பன்முகங்களை கொண்ட மனோபாலா, சதுரங்க வேட்டை, சதுரங்க வேட்டை 2-ஆம் பாகம் திரைப்படங்களை தயாரித்துள்ளார். அரவிந்த் சாமி, திரிஷா நடிப்பிலான சதுரங்க வேட்டை 2-ஆம் பாகம் திரைப்படம் ரிலீஸ்க்கு தாமதமாகி இருந்த நிலையில் தற்போது விரைவில் வெளியாகும் என அண்மையில் அறிவிக்கபட்டிருந்தது.

தொடர்புடைய இணைப்புகள்

Actor manobala reacts on his roaming in lockdown chennai

People looking for online information on Chennai lockdown, Lockdown, Lockdown2022 will find this news story useful.