LATEST : செம சந்தோஷத்தில் நடிகர் கார்த்தி வெளியிட்ட புகைப்படம்.. விஷயம் என்ன தெரியுமா..?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வைரல் அடித்து வருகிறது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடித்த பல்வேறு திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ஹிட் அடித்தன. கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இவர் தற்போது சுல்தான், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் தற்போது கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புதிய போட்டோவை வெளியிட்டுள்ளார். தற்போது பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சுல்தான் படத்தில் இவர் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்ததை அடுத்து, படக்குழுவுடன் எடுத்த  புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார்.

''இந்த ஐடியாவை கேட்டதில் இருந்து இன்று வரை, மூன்று வருடங்கள் ஓடிவிட்டன. இந்த கதை தொடர்ந்து எங்களை பரவசப்படுத்தி வந்துள்ளது. நான் நடித்ததில் இதுவே அதிக பொருட்செலவில் உருவாகவுள்ளது. படக்குழுவினர் அனைவருக்கும் எனது நன்றி'' என அவர் பதிவிட்டுள்ளார். இத்திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிப்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

நடிகர் கார்த்தி வெளியிட்ட புதிய போட்டோ | Actor Karthi's latest photo in twitter goes viral

People looking for online information on Karthi, Rashmika Mandanna, Sultan will find this news story useful.