LATEST: அருண் விஜய் - ஹரி படத்தின் அடுத்த மாஸ் அப்டேட் வந்துருச்சு!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கார்த்திக் நரேனின் 'மாஃபியா: அத்தியாயம் 1'  படத்தில் கடைசியாக நடித்த அருண் விஜய், தற்போது ஜி.என்.ஆர் குமாரவேலன் இயக்கத்தில் 'சினம்', நவீன் இயக்கத்தில் 'அக்னி சிறகுகள்', அறிவழகன் இயக்கத்தில் 'பார்டர்' படங்களில் நடித்துள்ளார்.

தனது மாமாவான இயக்குனர் ஹரியுடன் அருண் விஜய் முதல் முறையாக இணைந்துள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார், இவர்களுடன் பிரகாஷ் ராஜ், யோகி பாபு, ராதிகா சரத்குமார்,புகழ், அம்மு அபிராமி மற்றும் 'கேஜிஎஃப்' புகழ் கருடா ராம் ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்போது 'ஏ.வி 33' என்று பெயரிடப்பட்டுள்ள படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் சில நாட்களுக்கு முன் மீண்டும் தொடங்கியது. இந்நிலையில் இன்று நடிகர் அருண் விஜய் தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கீழ்கண்டவாறு அறிவித்துள்ளார்.

அதில் " பல நாட்களுக்கு பிறகு கிராமத்து கதையில் தலைசிறந்த இயக்குனர் ஹரி மற்றும் அவருடைய தொழில்நுட்ப கலைஞர்களுடன் பணிபுரிகிறேன். வெறித்தனமான அடுத்த கட்ட படப்பிடிப்பு துவங்க உள்ளது" என குறிப்பிட்டு படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

 

 

தொடர்புடைய இணைப்புகள்

Actor arun vijay - director hari movie next mass update

People looking for online information on Arun Vijay, AV33, Hari will find this news story useful.