''ஐஸ்வர்யா ராயும், மகளும் டிஸ்சார்ஜ் ஆகிட்டாங்க'' - அபிஷேக் பச்சன் தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமீபத்தில் நடிகர் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யா ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து 4 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அபிஷேக் பச்சன் தற்போது ட்விட்டர் பக்கத்தில் அவர்களது தற்போதைய நிலைமை குறித்து தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், ''தொடர்ந்து உங்களின் வேண்டுதல்களுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி . ஐஸ்வர்யா ஆராத்யாவும் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது வீட்டில் இருக்கிறார்கள். நானும் எனது அப்பாவும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறோம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Actor Abhishek Bachchan reveals Aishwarya Rai, Aaradhya tested negative for Covid-19 | கொரோனாவில் இருந்து ஐஸ்வர்யா ராயும் மகளும் மீண்டதாக அபிஷேக்

People looking for online information on Abhishek Bachchan, Aishwarya rai, Amitabh Bachchan, Covid - 19 will find this news story useful.