வெற்றிகளிப்பில் மகள், மற்றும் மனைவி ஐஸ்வர்யா ராயை கட்டிக்கொண்டு நெகிழ்ந்த அபிசேக் பச்சன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்டோர் தற்போது உச்சகட்ட மகிழ்ச்சியில் இருப்பது தொடர்பான விஷயம், அதிகம் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | நயன்தாரா நடிக்கும் 'CONNECT'.. தமிழ் நாட்டில் மட்டும் இத்தனை தியேட்டர்ல ரிலீசா! மாஸ்

கால்பந்து உலக கோப்பை போட்டிகள் ஒரு பக்கம் நடைபெற்று முடிந்த சூழலில், சமீபத்தில் இந்தியாவில் வைத்து நடைபெற்று வந்த புரோ கபடி லீக் தொடர் கூட முடிவுக்கு வந்திருந்தது.

இதன் இறுதி போட்டியில், புனேரி பல்தான்ஸ் மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் ஆகிய அணிகள் மோதி இருந்தது.

இதில், புனேரி பால்தான்ஸ் அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணி அபார வெற்றி பெற்றதுடன் கோப்பையையும் கைப்பற்றி உள்ளது. மேலும், ஜெய்ப்பூர் கபடி அணியின் உரிமையாளராக நடிகர் அபிஷேக் பச்சன் இருந்து வருகிறார். தங்களது அணி வெற்றி பெற்றதும் தனது மனைவி ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆராத்யா ஆகியோரை கட்டியணைத்து கொண்டு தங்களின் வெற்றியை கொண்டாடி இருந்தார். அதே போல, ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணி புரோ கபடி லீக் கோப்பையை கைப்பற்றுவது இது இரண்டாவது முறையாகும்.

தங்களது கபடி அணி கோப்பையைக் கைப்பற்றியது தொடர்பான புகைப்படங்களையும் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்திருந்தனர். மேலும், ஏராளமான பிரபலங்கள் கூட ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணியின் வெற்றிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.

முன்னதாக, போட்டியை நேரில் பார்க்கவும் பாலிவுட் பிரபலங்கள் ரன்வீர் சிங், பூஜா ஹெக்டே, ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்ட பலரும் மைதானத்தில் நேரில் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | "ரொம்ப வேகமா வளர்ந்துட்டான்".. தனது மகனின் Unseen வீடியோவை பகிர்ந்து காஜல் அகர்வால் நெகிழ்ச்சி!

தொடர்புடைய இணைப்புகள்

Abishek bachan celebrates his kabbadi team win with aishwarya and daughter

People looking for online information on Abishek bachan, Aishwarya rai, Kabbadi team will find this news story useful.