"ஊர ஏமாத்துறேனா?.. அதெப்படி சொல்லுவ?".. ‘வாயை விட்ட’ அபிஷேக்.. பொங்கிய தாமரை செல்வி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. யூடியூப் பிரபலங்கள், டிவி சேனல் பிரபலங்கள், நடிகர்கள், இசைக்கலைஞர்கள், பாடகர்கள் என பலரும் பங்கேற்று இருக்கும் இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இதில் விஜே அபிஷேக் ஓரிரு நாட்களில் அனைவர் பற்றியும் கருத்துக்களை பேச தொடங்கி இருக்கிறார். முன்னதாக அபினவ், வருண், மாஸ்டர் படத்தில் நடித்த சிபி என ஒவ்வொருவர் பற்றியும் அபிஷேக் தன்னுடைய கருத்தை கூறி வந்தார்.

அதன்படி “மிகப்பெரிய தயாரிப்பாளரின் வாரிசாக, பணக்காரராக இருந்தும் எளிமையாகவும் எதார்த்தமாகவும் பழகக் கூடியவர் வருண்”, “ஒரு விஷயம் கிடைக்கவில்லை என்றால் அதற்காக வருத்தப் படவோ - ஏமாற்றமடையவோ மாட்டார் சிபி”, “ராஜ பரம்பரையில் பதவிக்கு ஆசைப்படாத ஒரு பையன்தான் சாவித்திரியின் பேரன் அபினவ்” என்றெல்லாம் கூறி வந்தார். 

அதன் பின்னர் தன்னுடைய அம்மாவை பற்றி பேசிய அபிஷேக், அவர் மீது தான் அடிக்கடி கோபப்பட்டு இருந்ததாகவும் தன் விவாகரத்தால் தன் அம்மா மிகப்பெரிய வலியை அனுபவித்து வந்ததாகவும் பேசி அழத்தொடங்கினார். அவரை அனைவரும் சமாதானப்படுத்தினர்.

இந்த நிலையில் மறுபடியும் அபிஷேக் ஒவ்வொருவர் பற்றியும் பேசக் கூடிய பேச்சை கையில் எடுத்திருக்கிறார். முன்னதாக யூடியூபில் ரிவ்யூ சொல்லும் பாணியில் ஐக்கி பெர்ரியின் ஹேர் ஸ்டைல் பற்றி வர்ணித்து சொன்ன அபிஷேக் அடுத்ததாக தாமரைச்செல்வி நெற்றியில் பட்டையை வைத்திருந்தது பற்றி குறிப்பிட்டார்.

நெற்றியில் பட்டையை போட்டு தாமரைச் செல்வி ஊரை ஏமாற்றுகிறார் என்று அபிஷேக் போகிறபோக்கில் விளையாட்டாக குறிப்பிட, விளையாட்டாகவே வெடிக்க தொடங்கினார் தாமரைச்செல்வி. ஆம், சிரித்துக்கொண்டே, “அதெப்படி என்னை பார்த்து அப்படி சொல்லலாம்?” என்று அனைவரையும் கூட்டி பஞ்சாயத்தை நடத்த தொடங்கிவிட்டார்.

இமான் அண்ணாச்சியை உடன் சேர்த்துக்கொண்டு அபிஷேக்கிடம், “எப்படி என்னை பார்த்து அப்படி சொல்லுவ?” என்று லாக் பண்ணி விட்டார் தாமரைச்செல்வி. இவை அத்தனையும் தாமரைச்செல்வி சிரித்துக்கொண்டே செய்தாலும் ஒரு இடத்தில் சீரியஸாக, “சத்தியமா சொல்றேன்.. எனக்கு கோபம் வந்துவிடும். அதைப் பற்றி (திருநீற்றுப் பட்டை) மட்டும் பேச வேண்டாம்!” என்று எச்சரிக்கையும் விடுக்கிறார்.

ஆனால் அபிஷேக் காலில் விழ, மீண்டும் அதற்கு தாமரைச்செல்வி மண்டியிட இரண்டு பேரும் சிரித்துக்கொண்டே விளையாட்டாக ஒருவரிடம் ஒருவர் காலில் விழுந்து கொள்கின்றனர்.

இதேபோல் தாமரைச்செல்வியிடம், “எலிமினேஷன் ஆனால் என்ன செய்வீர்கள்” என கேட்க, “அப்படினா என்ன?” என்று தாமரை கேட்க, “ஒருவேளை நீங்கள் வெளியே சென்றால் எப்படி இருக்கும் உங்களுக்கு?” என்று நிரூப் சொல்கிறார். உடனே, “அப்படி ஏன் சொல்கிறீங்க? நான் சந்தோஷமா இருக்கிறது பிடிக்கலையா?” என்று பேசத் தொடங்கி கலகலப்பாக நிறையவே பேசி விட்டார் தாமரை அக்கா.

தொடர்ந்து பேசியவர், “பிக்பாஸ் வீட்டில் ஏசி இருக்கிறது.. லைட் இருக்கிறது.. மூன்று வேளை உணவு கிடைக்கிறது .. நான் இங்கேயே தான் இருப்பேன்.. என்னை போகச் சொன்னால் எனக்கு பதிலாக நீங்கள் வெளியேறுங்கள் இமான் அண்ணாச்சி!” என்று எதார்த்தமாக சிரித்தபடி தாமரைச்செல்வி பேசுகிறார். அனைவரும் அதற்கு சிரித்துக் கொண்டிருந்தனர்.

Also Read: “பிக்பாஸ் VOICE ராஜினாமா பண்ணிட்டு கும்பகோணத்துக்கு போய்ட்டார்!”.. வெச்சுசெய்யும் பிரியங்கா!

தொடர்புடைய இணைப்புகள்

Abhishek teased thamarai selvi sentiment her reply biggbosstamil5

People looking for online information on Abhinav, Akshara Reddy, அபிஷேக், இமான் அண்ணாச்சி, பிக்பாஸ், விஜய் டிவி BBTamilSeason5, Biggboss abishek, Biggbosstamil, BiggBossTamil5, Chinnaponnu, GrandLaunch, Ikky Berry, ImmanAnnachi, Isaivani, Kamalhassan, Master Cibi, Pavani Reddy, Raju, Thamarai Selvi, Varun, VijayTelevision, VJ Priyanka will find this news story useful.