“3 வருஷமா கூப்ட்டாங்க.. பிக்பாஸ்க்கு போனது இதனால தான்”.. பட விழாவில் ரகசியம் உடைத்த ஆரி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் இதயங்களை வென்றவர் நடிகர் ஆரி.

Advertising
>
Advertising

மாலைப்பொழுதின் மயக்கத்திலே படம் தொடங்கி, நெடுஞ்சாலை உள்ளிட்ட படங்களில் தன் அசகாய நடிப்பை வெளிப்படுத்தி நடிகர் ஆரி, விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் முந்தைய சீசனான, அதாவது 4வது சீசனில் கலந்துகொண்டு, அந்த சீசனில் வெற்றியும் பெற்றார்.

இந்நிலையில் சென்னையில் நிகழ்ந்த கண்மணி பாப்பா திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நடிகர் ஆரி கலந்துகொண்டார். தமன் குமார் (வானத்தைப் போல சீரியல் நாயகன்), மியாஸ்ரீ, மானஸ்வி, லாரன்ஸ் (எ) சிவம் , சிங்கம் புலி, கொட்டாச்சி உள்ளிட்டோர் நடித்த இப்படத்தை ஸ்ரீமணி இயக்க, ஸ்ரீ சாய் தேவ் இசையமைத்துள்ளார். ராஜதுரை ஒளிப்பதிவு செய்துள்ளார். பம்பா பாக்யா, ஹரி கிருஷ்ணா, கமலஜா இப்படத்தின் பாடல்களை பாடியுள்ளனர். வனஜாக்ஷி கிரியேஷன்ஸ்‌ & எஸ் எம் எஸ் நிறுவனங்கள் இப்படத்தை தயாரித்துள்ளன.

‘அவள்’ படத்தின் ஒலிக்கலவை & வடிவமைப்புக்காக பிஹைண்ட்வுட்ஸ் கோல்டு மெடல் விருது பெற்ற A.M.ரஹ்மத்துல்லா இப்படத்தில் பணிபுரிந்துள்ளார். ஜீ மியூசிக்கில் இப்படத்தின் ஆடியோ வெளியாகியுள்ளது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ஆரி, தயாரிப்பாளர் சி.வி‌.குமார், ஈரோடு மகேஷ், லொள்ளு சபா மாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றிய நடிகர் ஆரி, “பிக்பாஸ்க்கு பிறகு நான் கலந்துகொண்டுள்ள ஆடியோ நிகழ்ச்சி இது. நான் இதில் கலந்துகொண்டதற்கு அழகான காரணம் நடிகர் தமன் என் நெருங்கிய நண்பர். தமிழ் சினிமாவில் சரவர படங்கள் வருவதில்லை உள்ளிட்ட பேச்சுகளுக்கு மத்தியில் தற்போது ஜெய்பீம், மாநாடு உள்ளிட்ட படங்கள் விருப்பு வெறுப்புகளைத் தாண்டி நல்ல படங்களாக வந்துள்ளன.

இப்படத்தில் இசையமைப்பாளருக்கு நல்ல எதிர்காலத்தை கொடுக்கும் என்பது பின்னணி இசையில் இருந்து தெரிகிறது. அவருடைய 10 வருட போராட்டத்தை நான் அறிவேன். ஹீரோ தமனுக்கும் இப்படம் முக்கியமானது. அனைவருக்குமே போராட்டமான வாழ்க்கைதான். நானும் தமனும், நான் பிக்பாஸ் போவது குறித்து பேசிக்கொண்டிருந்தோம். 3 வருடங்களாக என்னை பிக்பாஸிற்கு அழைத்தார்கள்.

அப்போது தமன் உடபட என் நண்பர்கள் சிலர், ‘வீட்ல இருக்குறதுக்கு அங்க போயிட்டு இருந்துட்டு வாங்க. இங்க எப்படி பேசுவீங்களோ, அதே போல் அங்கயும் போய் எப்போதும்போல் இருங்கள், பேசுங்கள்!’ என்றனர். நானும் சென்றேன். நான் சென்றுவிட்டு வரும்போது வெற்றியாளனாக வருவேன் என எதிர்பார்க்கவில்லை. ” என்று பேசியிருந்தார்.

நடிகர் ஆரி நடிப்பில் பகவான், எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக காத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Aari reveals secret what happened before going bggboss

People looking for online information on Aari, இசை வெளியீட்டு விழா, திரைப்பட விழா, நடிகர் ஆரி, BiggBossTamil5, KanmaniPapa, Sun TV Serial, Tv actor, Vaanathaipola will find this news story useful.