அவரை இப்படி பாக்க 'ரொம்ப' கஷ்டமா இருக்கு... ரசிகர்கள் ஆதரவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று பிக்பாஸ் வீட்டுக்குள் அர்ச்சனா, நிஷா, ரேகா மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகிய நான்கு பேரும் ரீ-எண்ட்ரி கொடுத்தனர். இதைப்பார்த்த போட்டியாளர்கள் ஆரவாரத்தில் குதிக்க அவர்களுக்கு மாஸ்டர் பாடல் ஒன்றை டெடிகேட் செய்து பிக்பாஸ் மேலும் கொஞ்சம் எனர்ஜி ஏத்தினார். வெளியில் என்ன நடந்தது என்பதை காமெடியாக விளக்கிய நிஷா மாவு டாஸ்க்கில் அனைவரையும் சிரிக்க வைத்தார்.

அனைவரும் அமர்ந்து பேசினாலும் கூட ஆரியிடம் யாரும் இணக்கம் காட்டாதது போல இருந்தது. இதைப்பார்த்த ரசிகர்கள் மறுபடியும் குரூப்பா உட்கார்ந்து பேச ஆரம்பிச்சிட்டாங்க. பாவம் அந்த மனுஷன் என சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் ஆரியை இப்படி பார்க்க தங்களுக்கு கஷ்டமாக இருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

போட்டியாளர்கள் உள்ளே வந்திருப்பதால் போட்டி தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது. அதே நேரம் சனம், அனிதா ஆகியோர் மீண்டும் உள்ளே வருவார்களா? என்றும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

'Aari isolated again' Netizens extend their support

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.