பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு ஆரி வெளியிட்ட முதல் பதிவு..."எல்லா புகழும்"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ ஆகிய 5 இறுதிப்போட்டியாளர்களுள் ஆரி  பிக்பாஸ் டைட்டில் வென்றெடுத்தார். அதுவும் இதுவரை இல்லாத அளவிற்கு 16 கோடி வாக்குகளை பெற்று அவர் முன்னிலையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பத்தில் மற்ற போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டாலும், சாதுரியமாக தனது விளையாட்டில் களம் இறங்கினார் ஆரி. அதிலிருந்தே அவருக்கு ரசிகர்கள் குவிய தொடங்கினர். ஒருகட்டத்தில் ஆரி தான் டைட்டில் வெல்ல வேண்டும் என்று பெரும்பாலான மக்கள் ஒருசேர வாக்களித்ததை பார்க்க முடிந்தது.

aari first post after biggboss4tamil ஆரி வெளியிட்ட முதல் பதிவு

அதற்கு முக்கிய காரணமாக அவரது நேர்மையும், மன உறுதியும், சமூக அக்கறையும் ஒரு காரணம். இப்படி  எந்தவித எதிர்பார்ப்புமின்றி களமிறங்கி இன்று அனைவரையும் கவர்ந்திருக்கும் ஆரி நிச்சயம் பிக்பாஸ்  வரலாற்றில் ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நேற்றைய தினம் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு அவர் முதல் முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ள்ளார். அதில் அவர் கூறும் பொழுது "எல்லாம் புகழும் வாக்களித்த உங்களுக்கே...." என்று கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது மிகவும் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு ஆரி வெளியிட்ட முதல் பதிவு..."எல்லா புகழும்" வீடியோ

Tags : Aari

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Aari first post after biggboss4tamil ஆரி வெளியிட்ட முதல் பதிவு

People looking for online information on Aari will find this news story useful.