ஆரி கிட்ட மட்டும் கோபப்பட்டீங்க ஆனா அன்னைக்கு ... அனிதாவுக்கு குறும்படம் போட்ட ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி 75 நாட்களை கடந்து வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்றைய தினம் பிக்பாஸ் ஒரு ராஜதந்திரத்தை முன்வைத்தார். போட்டியாளர்கள் யாரிடம் வேண்டுமானாலும் எந்த கேள்வி வேணாலும் கேட்கலாம் என்று கூறப்பட்டது. அப்போது ஆரியிடம் ஷிவானி "இந்த வீட்டில் யார் ஊக்கம் குறைந்து காணப்படுகிறார்கள்" என்று கேட்க ஆரி அனிதாவின் பெயரை சொல்லி, அவர் தன் குடும்பத்தை பற்றி கூறிய விஷயத்தை எடுத்த போதுஅனிதாவின் கணவர் பிரபாகரனின் பெயரை உபயோகித்து முடிக்கும் முன்னரே அனிதா கோபத்தின் உச்சிக்கே சென்றார்.

இதுவரை இல்லாத அளவிற்கு ஆரியிடம் மிகவும் கடுமையாக பேசியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. விரலை நீட்டியவாறு அவர் பல்லை கடித்துக்கொண்டு மிகவும் கோபமாக பேசினார். மேலும் அவர் "எனது கணவரை பற்றி பேசாதீர்கள் எனது கணவரை பற்றி பேசினால் நான் வருவேன்" என்பது போல அவர் கூறினார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ஒரு வீடியோவை தற்போது வைரல் ஆக்கி வருகின்றனர். 

அதாவது அர்ச்சனா அனிதாவின் கணவரிடம் கேமராவை பார்த்து "உங்களுடைய பொறுமையை பார்த்து நான் வியக்கிறேன். எனக்கு வார்த்தைகளே இல்லை. 20 வருடங்களாக பேசி பழகிய நானே வார்த்தைகளுக்காக பயப்படுகிறேன். அப்படிப்பட்ட ஒரு இன்பத்தை நீங்கள் சுமந்து கொண்டு இருக்கிறீர்கள் 90 நாட்கள் நீங்கள் மகிழ்ச்சியாக இருந்து இருக்கிறீர்கள் ஆனால் நாங்கள் என்ன அனுபவிக்கிறோம் என்பது, உங்களுக்கு தலை வணங்குகிறேன்" என்று கூறுகிறார். "அனிதா இவற்றை பார்த்துக் சிரித்துக் கொண்டுதான் இருக்கிறார். ஆனால் ஆரி கூறும் பொழுது அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை கூட பொறுத்திருந்து கேட்காமல் ஏன் கோபம் கொள்கிறார்" ஆரியின் ரசிகர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர் .

தொடர்புடைய இணைப்புகள்

அனிதாவுக்கு குறும்படம் போட்ட ரசிகர்கள் aari fans share kurumpadam for anitha

People looking for online information on Aari, Anitha, Biggboss4tamil will find this news story useful.