40 YEARS OF மூன்றாம் பிறை:சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய போட்டியை அறிவித்த பாலு மகேந்திரா நூலகம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

"மூன்றாம் பிறை" ஒரு கீர்வாத்கோ கவிதை.. மிக அரிதாக மலையாளத்தில் சரியாக மொழிபெயர்க்கப்பட்ட ரஷியக் கவிதையை ஒரு மழைநாளில் படிக்கையில் வரும் களிப்பு "மூன்றாம் பிறை" காண்கையில் கிடைக்கும். தமிழ் சினிமாவின் அரிதான சம்பவம்.. அதற்கு முன்பும். அதற்குப் பிறகும். - அடூர் கோபாலகிருஷ்ணன் உதிர்த்த வார்த்தைகள் இவை.

Advertising
>
Advertising

மார்ஃப் செய்த மாளவிகா மோகனன் ஆபாச PHOTO: முன்னணி செய்தி நிறுவனத்திற்கு எதிராக கொந்தளித்த நடிகை

அந்த அளவுக்கு இந்திய திரையுலகில் மூன்றாம் பிறையும் சத்மாவும் தாக்கத்தை ஏற்படுத்தின. மூன்றாம் பிறை படம் வெளியாகி இம்மாதத்துடன் 40 வருடம் ஆக உள்ளதை பெரு விழாவாக பாலு மகேந்திரா நூலகம் கொண்டாட இருக்கிறது. இது குறித்து போட்டியையும் ரசிகர்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது பாலு ம்கேந்திரா நூலகம். மேலும் இது குறித்த அறிவிப்பையும் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

 

மூன்றம் பிறை  40 ம் ஆண்டு கொண்டாட்டம்

விழா சிறப்பு மலரில் வாசகர்களும் பங்கேற்க வாய்ப்பு: பாலுமகேந்திரா  நூலகம் அறிவிப்பு

சத்யஜோதி தியாகராஜன் அவர்கள்  தயாரிப்பில் உலகநாயகன் கமல் மற்றும் ஸ்ரீதேவி நடிப்பில் இசைஞானி இளையராஜா இசையில் பாலுமகேந்திரா அவர்களின் இயக்கத்தில்  1982 ல் வெளியான மூன்றாம்பிறை  தமிழ் சினிமாவின் மகத்தான காவியங்களுல் ஒன்றாக இன்றும் மக்கள் மனதில் உயர்ந்து நிற்கிறது. . ஒட்டு மொத்த இந்தியாவையே  தமிழ் சினிமாவை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்த இந்த பெருமைமிகு திரைக்காவியம்  வரும் பிப்ரவரி 19 ம் தேதியோடு நாற்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது ..

 

இந்த பெருமை மிகு நிகழ்வை கொண்டாடும் வகையில்  பாலு மகேந்திரா நூலகம்  இயக்குனர் வெற்றிமாறன் தலைமையில் ஒரு சிறப்பு மலரை கொண்டு வரத்திட்டமிட்டிருக்கிறது .இந்த மலரில் படத்தில் இடம் பெற்ற நடசத்திரங்கள் தொழில் நுட்ப, கலைஞர்களின் அனுபவ பகிர்வுகளுடன்  படத்தை வெற்றிப் படமாக்கிய   பார்வையாளர்களின் பங்களிப்பும் இடம் பெற விரும்புகிறோம்.

அதன்   பொருட்டு  மூன்றம் பிறை படத்தை தியேட்டரில் வெளிவந்த  காலத்தில் அதை பார்த்த அனுபவத்தை 500 வார்த்தைகளுக்கு மிகாமல் ஒரு கட்டுரையாக எழுதி அனுப்பவேண்டும்  இக் கட்டுரையோடு  படம் பார்த்த திரையரங்கம், .. ஊர் மற்றும் தங்களது தற்போதைய அன்றைய மற்றும் இன்றைய புகைப்படத்துடன்  கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன ..

தேர்வு செய்யப்படும் .பிரசுரத்துக்கு தகுதியான சிறந்த  கட்டுரைகளுக்கு  தலா ஐயாயிரம் ருபாய். பரிசளிக்கப்படும். அது மட்டுமல்ல படம் வெளியான அரங்கம் அல்லது சுவரொட்டியுடன் உங்கள் புகைப்படம் இருந்தால் அதற்கும் சிறப்பு பரிசுகள் உண்டு. ஒருவர் ஒரு கட்டுரை மட்டுமே அனுப்பலாம்.

உங்கள் கட்டுரையை   கீழே கொடுக்கப் பட்டுள்ள  பாலு மகேந்திரா  நூலக முகவரிக்கு  தபால் மூலமகவோ அல்லது ஈ மெயில் முகவரி  வழி இணையம் வழியிலோ அனுப்பலாம் புகைப்படங்கள் கட்டுரைகள் தெளிவாக இல்லாமல் இருநதால் பிரசுரத்துக்கு  ஏற்கப்பட மாட்டது .இறுதி தேதி 12.02.2022.

 


முகவரி: பாலு மகேந்திரா நூலகம், மகாலட்சுமி அடுக்ககம் , 4வது தெரு அன்பு நகர்
வளசரவாக்கம் சென்னை

Email:  balumahendralibrary@gmail.com

பேச: 9884060274

என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

அடுத்தடுத்து தியேட்டரில் ரிலீஸ் ஆகும் மாஸ் ஹீரோ படங்கள்.. எது? & எப்ப?.. Full List ரெடி!.. இனி ஜமாய் தான்!

 

 

மற்ற செய்திகள்

40 Years Of Moondram Pirai Balu Mahendra Library

People looking for online information on 40 Years Of Moondram Pirai, சத்யஜோதி தியாகராஜன், மூன்றம் பிறை, Balu mahendra will find this news story useful.