சினிமா மீதான காதலை டாட்டூவில் சொன்ன பிரபல நடிகை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் சினிமா மீதான தனது காதலை கூறும் வகையில் தனது கையில் புதிய டாட்டூ ஒன்றை போட்டுள்ளார்.

விஜய் நடித்த ‘சர்கார்’, விஷாலின் ‘சண்டக்கோழி 2’, தனுஷின் ‘மாரி 2’ உள்ளிட்ட திரைபப்டங்களில் வலுவான வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை வரலக்ஷ்மி. கதாநாயகியாக மட்டுமே நடிப்பேன் போன்ற கொள்கைகள் ஏதுமின்றி, தனக்கு சவாலாக தோன்றும் அத்தனை கதாபாத்திரங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி சமூக பிரச்னைகளிலும், பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்களுக்கும் தைரியமாக குரல் கொடுத்து வருகிறார் நடிகை வரலக்ஷ்மி. அதன் ஒரு பகுதியாக பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்கும்விதமாகவும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடனடியாக தீர்வுகாணவும் ‘சேவ் சக்தி’ என்ற பெண்கள் பாதுகாப்பு அமைப்பையும் தொடங்கி நடத்தி வருகிறார்.

இந்நிலையில், சினிமா மீதான காதலை சொல்லும் விதமாகவும், போராளி பெண்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்களை ஆதரிக்கும் விதமாகவும் புதிய டாட்டூ ஒன்றை போட்டுள்ளார். முகமூடியை டாட்டூ-வாக போட்டுள்ள வரலக்ஷ்மி, பொய்கள் நிறைந்த இந்த வாழ்க்கையை மற்றவர்களுக்காகவே வாழ்கிறோம். எந்த முகமூடியும் இல்லாமல், நமக்கான அமைதியான வாழ்க்கையை வாழுவோம் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தற்போது, ‘வெல்வெட் நகரம்’, ‘கன்னி ராசி’, ‘நீயா 2’, ‘காட்டேரி’, ‘ராஜபார்வை’, ‘சக்தி’ 'டேனி' உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களை நடிகை வரலக்ஷ்மி தன் கைவசம் வைத்துள்ளார்.

Varalakshmi Sarathkumar gets a new mask tattoo on her hand

People looking for online information on Tamil cinema, Tattoo, Varalaxmi Sarathkumar will find this news story useful.