'Emergency அனுமதி பெற்று'... 'ஜனவரியில் முதல் Batch தடுப்பூசி!'... 'பிரபல நிறுவனம் அதிரடி அறிவிப்பு!!!'...
முகப்பு > செய்திகள் > உலகம்ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி கிட்டத்தட்ட 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறையாமல் உள்ளது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நிறுவனங்கள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனமும் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் தடுப்பூசியான AD26-COV2-S அமெரிக்காவில் ஆய்வு நடத்தப்பட்டு வரும் நான்காவது தடுப்பூசி ஆகும். கடந்த மாத இறுதியில் முதல் கட்ட பரிசோதனை வெற்றிகரமாக முடிந்த நிலையில், தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட தன்னார்வலர் ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து 2ஆம் கட்ட பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தெரிவித்தது.
இந்நிலையில் தற்போது ஜனவரி முதல் கொரோனா தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் பொது சுகாதார ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை தலைவர் ருக்ஸாண்ட்ரா டிராகியா அக்லி, தங்கள் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி அவசரகால பயன்பாட்டுக்காக வரும் ஜனவரி மாதத்தில் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “ஒரு பக்கம் TCS, Infosys-ல் 99% வொர்க் ஃப்ரம் ஹோம்!”.. ஆனால் HCL, Tech Mahindra-வின் ‘மாற்று’ முடிவு!.. Wipro உள்ளிட்ட ஐடி நிறுவனங்களின் யோசனை இதுதான்!
- ‘22 வயது பெண் செய்த காரியம்!’... இன்ஸ்டாகிராமில் போட்டோ போட்டதும்’.. உடனே ட்ரேஸ் செய்து ‘நேரில்’ வந்த போலீஸ்!
- 'தமிழகத்தின் இன்றைய (26-10-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...!
- 'நவம்பர் 2-ஆம் தேதி ஆஸ்ட்ரோசென்கா தடுப்பூசி ரெடி...' 'ஹாஸ்பிட்டல்ல வந்து போடலாம்...' - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட மருத்துவமனை...!
- ‘நிம்மதியா ஷாப்பிங் பண்ணுங்க’.. ‘ஒரு பயலும் செயினை பறிக்க முடியாது!’.. ‘திருடர்களுக்கு டஃப் கொடுக்கும்’ சென்னை சிட்டி போலீஸின் புதுமுயற்சி!
- 'எனக்கு 'கொரோனா' இல்ல'... 'ஆனாலும் லைட்டா பயமா இருக்கு'... இப்படி பயப்படுகிறவர்களுக்காக 12 நிமிடத்தில் பரிசோதனை முடிவு!
- ‘நெஞ்சுல பாலை வார்த்தீங்க!’.. ‘கொரோனா’ அடிச்ச ‘அடியில்’ இருந்து ‘மீண்டு விடுவோம்’ எனும் ‘நம்பிக்கை’ தரும் ஐடி, வணிக நிறுவனங்களின் அதிரடி ‘முடிவுகள்!’
- "இந்தியர் ஒவ்வொருத்தருக்கும் 'இவ்வளவு' செலவு ஆகும்!.. ஆனா, அதப்பத்தி கவலைப்படாதீங்க!".. கொரோனா தடுப்பூசி குறித்து மத்திய அரசு 'அதிரடி' அறிவிப்பு!
- மறுபடியும் முதல்ல இருந்தா..! கட்டுக்கடங்காமல் அதிகரித்த ‘கொரோனா’.. மீண்டும் ‘ஊரடங்கை’ அறிவித்த நாடு..!
- கொரோனா தொற்று உறுதி!.. எக்மோ கருவியின் மூலம்... தீவிர சிகிச்சையில் அமைச்சர் துரைக்கண்ணு!