'எவ்ளோ சொல்லியும் கேக்கல'... 'காதலர்கள் செய்த அதிர்ச்சி காரியத்தால்'... 'திருமணமான நான்கே மாதத்தில் நேர்ந்த சோகம்'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கிருஷ்ணகிரி அருகே காதலர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் (24) என்பவர் பவானி (18) என்ற பெண்ணை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த சுரேசின் பெற்றோர் அவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, சுரேசுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வேறு ஒரு பெண்ணை திருமணமும் செய்து வைத்துள்ளனர். இதனால் காதலர்கள் இருவரும் மனமுடைந்திருந்த நிலையில், கடந்த 29ஆம் தேதி சுரேசும், பவானியும் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் குந்தாரப்பள்ளி கூட்ரோடு பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே அவர்கள் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் உடனடியாக அவர்கள் 2 பேரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பவானி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர் சிகிச்சை பலனின்றி சுரேஷும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்