'மீண்டும் மருத்துவமனையில் அனுமதி'... 'கேப்டன் உடல்நிலை குறித்து'... 'மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள புதிய அறிக்கை!!!'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து மியாட் மருத்துவமனை புதிய அறிக்கை வெளியிட்டுள்ளது.

தேமுதிக தலைவா் விஜயகாந்த் மற்றும் அவருடைய மனைவி பிரேமலதா இருவரும், கொரோனா வைரஸால்  பாதிக்கப்பட்டு, சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கடந்த 2 ஆம் தேதி குணமடைந்து இருவரும் வீடு திரும்பினர்.

இதையடுத்து வீட்டுக் கண்காணிப்பில் இருந்து வந்த விஜயகாந்துக்கு, செவ்வாய்க்கிழமை மாலை உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, மீண்டும் அவர் மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கொரோனா சிகிச்சை முடிந்து தொடர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்