'எத்தன தடவ?!!'... 'விட்டு விட்டு பிடித்த 'செம்ம' கேட்ச்சால்'... 'சீரியஸான போட்டியில் சிரிப்பு காட்டிய மும்பை வீரர்!!!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையேயான நேற்றைய முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் அனைவருடைய சிறப்பான ஆட்டத்தாலும் அந்த அணி டெல்லிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. மும்பை அணி இந்த தொடர் முழுவதுமே சிறப்பாக விளையாடி வரும் நிலையில், நேற்றைய தகுதிச்சுற்று போட்டியிலும் அவர்கள் அசத்தியுள்ளனர்.

ரோகித் சர்மா மற்றும் கீரன் பொல்லார்ட் என இரண்டு முக்கிய விக்கெட்டுகள் வீழ்ந்தபோதும், அடுத்துவந்த பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி அணியை இறுதிப்போட்டிக்கு முன்னேற்றியுள்ளனர். அதேபோல பந்துவீச்சில் பும்ரா, போல்ட் ஆகியோரின் அதிரடி பௌலிங்கும் அணிக்கு வலு சேர்த்தது. அவர்கள் அடுத்தடுத்து முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்துள்ளனர்.

மேலும் இந்தப் போட்டியில் ஒவ்வொரு மும்பை வீரருமே சிறப்பான பீல்டிங்கை வழங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக பௌலர் ராகுல் சாஹர் 2 ஓவர்கள் பந்துவீசி அதிக ரன்களை கொடுத்த போதும், பீல்டிங்கில் கலக்கி நேற்றைய போட்டியில் கவனம் ஈர்த்துள்ளார். டெல்லி அணியில் 42 ரன்கள் அடித்த அக்சர் படேலின் விக்கெட்டை எடுப்பதற்காக அவர் தட்டி தட்டி பிடித்த கேட்ச் ஒன்று ரசிகர்களை கவர்ந்து தற்போது வைரலாகி வருகிறது.

 

 

 

 

 

 

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்