VIDEO: 'கொரோனா வந்து இப்போ உங்களுக்கு சரியாச்சுன்னா...' ப்ளீஸ் 'இத' கண்டிப்பா பண்ணுங்க...! - ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த மாஸ்டர்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் தன் ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக ஒரு கோரிக்கையை விடுத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானாக இருக்கும் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய 48 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். சச்சினின் பிறந்தநாள் அன்று அவரது ரசிகர்கள் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.

இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய ட்விட்டர் பதிவில் தன்னுடைய ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக ஒரு கோரிக்கை வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

அதில், 'என்னுடைய இந்த பிறந்தநாள் அன்று எனக்கு வாழ்த்து தெரிவித்த உங்கள் அனைவருக்கும் நன்றி. உங்களின் வாழ்த்துகள் இந்த நாளை மேலும் சிறப்பாக்கியது, இந்த அன்பிற்கு எப்போதும் உண்மையுள்ளவனாக இருப்பேன்.

கடந்த மாதம் எனக்கு கொரோனா பாதித்தது உங்கள் அனைவருக்கும் தெரியும். வைரஸ் பாதித்து, மருத்துவர்களின் அறிவுரைப்படி நான் 21 நாள்கள் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். கொரோனாவில் இருந்து மீண்டு வர மருத்துவர்கள் எனக்கு பேருதவியாய் இருந்தார்கள். உங்கள் அனைவருடைய பிரார்த்தனைகளும் எனக்கு துணையாக இருந்தது' எனக் கூறியிருந்தார்.

அதோடு, 'கடந்த வருடம் முதல் நான் பிளாஸ்மா தானம் செய்யும் மையத்தை தொடக்கி வைத்தேன். இன்று என் பிறந்தநாள் அன்று அனைவருக்கும் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் தயவு செய்து பிளாஸ்மா தானம் செய்யுங்கள்.

உங்களின் இந்த பிளாஸ்மா தானம் தேவைப்படும் நோயாளிகளுக்கு பேருதவியாக இருக்கும். எனவே பிளாஸ்மா தானம் செய்யுங்கள். நானும் செய்ய இருக்கிறேன், மருத்துவர்கள் எப்போது சொல்கிறார்களோ அப்போது பிளாஸ்மா தானம் செய்யவுள்ளேன்' எனவும் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்