அட இங்கையும் பிரச்சாரமா? தனி ஸ்டைலில் பிரச்சாரம் செய்யும் பிரியங்கா காந்தி!

முகப்பு > செய்திகள் > India news
By |

ராகுல் காந்தியின் சகோதரியான பிரியங்கா காந்திக்கு, சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. இந்நிலையில், வரும் மக்களவை தேர்தலுக்காக பிரியங்கா தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இன்று இரவு டெல்லியில் இருந்து கைபியாத் எக்ஸ்பிரஸ் மூலம் பைசாபாத் செல்கிறார். அங்கு அயோத்தியின் அனுமர் கோவிலில் தரிசனம் செய்து, தன் பிரசாரத்தை தொடங்குகிறார்.

பைசாபாத் தொகுதியில் போட்டியிடும் நிர்மல் கத்ரிக்கு ஆதரவாக பிரியங்கா பிரசாரம் செய்ய இருக்கிறார். இதில் கைபியாத் எக்ஸ்பிரஸ் பயணத்தில் முக்கிய விஷயம் ஒன்று அடங்கியுள்ளது. அதாவது, இந்த ரயிலில் ஆசம்கர் உள்ளிட்ட கிழக்குப் பகுதிகளுக்கு செல்ல ஏராளமான முஸ்லீக் மக்கள் ரயிலில் பயணிப்பர்.

இந்நிலையில், ரயிலில் பயணிக்கும் பயணிகளுடன் தானும் ரயிலில் அவர்களுடன் பயணித்தப்படியே பிரசாரம் செய்ய பிரியங்கா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக வாரணாசியில் படகின் மூலம் பிரியங்கா பிரசாரப் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்