ஆமா!..இந்திய விமானபடை எங்கள அட்டாக் பண்ணிட்டாங்க...ஆனால்?...பாகிஸ்தான் ராணுவம்!

முகப்பு > செய்திகள் > India news
By |

புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 40 துணை ராணுவத்தினர் உயிரிழந்த நிலையில்,அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடத்தியுள்ளது.

இன்று அதிகாலை 3.30 மணியளவில் பாகிஸ்தான் எல்லையொட்டிய பயங்கரவாதிகள் முகாம் மீது 1000 கிலோ அளவிலான குண்டுகளை இந்திய விமானப்படை வீசியுள்ளது.இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் மூலம் இந்த அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இதில் பயங்கரவாதிகளின் முகாம்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டதாக இந்திய விமானப்படையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது உண்மைதான் என பாகிஸ்தான் ராணுவ செய்தித்தொடர்பாளர் மாஜ் ஜென் ஆஸிப் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் ''முஷாபார்பாத் பகுதியில் இந்திய விமானங்கள் அத்துமீறின.இந்த தாக்குதலில் எங்கள் தரப்பில் எந்தவித உயிர் சேதமோ அல்லது பொருட் சேதமோ ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்.

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்