"அந்த வாழ்க்கை'ல நான் பாத்தது.." இறப்பில் இருந்து திரும்பி வந்த பெண்கள்??.. "அவங்க சொன்னத கேட்டு ஒரு நிமிஷம் அள்ளு விட்டுருச்சு!!"

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இறந்ததாக அறிவிக்கப்பட்ட இரண்டு பெண்கள் அடுத்த சில மணி நேரத்தில் மீண்டும் உயிர் பெற்று திரும்பிய நிலையில், அவர்கள் இறந்ததாக அறிவிக்கப்பட்ட சமயத்தில், என்னென்ன சந்திக்க நேரிட்டது என்பதை பற்றி தெரிவித்துள்ள தகவல், தற்போது பலரையும் ஆச்சரியத்தில் உறைய செய்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா.. பரபரப்பான அரசியல் களம்.. அடுத்த கட்ட நடவடிக்கை என்ன??

Betty மற்றும் Jessie ஆகிய இரண்டு பெண்கள், தாங்கள் இறந்த பிறகு சந்தித்த விஷயங்கள் பற்றி டிவி நிகழ்ச்சி ஒன்றில், கருத்து தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

78 வயதாகும் Betty என்ற பெண்மணி, கருப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்த சமயத்தில், உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார். அதன் பின்னர், தனது அனுபவங்களை விவரிக்கும் Betty, "மருத்துவமனையில் இருக்கும் போது, திடீரென என் உடல் முழுவதும் ரத்தம் வெளியே சென்றது போன்றும், உடலின் ஆத்மா வெளியே வந்தது போன்றும் தோன்றியது. நான் கீழே பார்த்த போது, படுக்கையில் எனது உடல் இருந்தது. அப்போது நான் இறந்து விட்டேன் என்பதை உணர்ந்து கொண்டேன்" என Betty கூறியுள்ளார்.

மேலும், தான் உயிரிழந்து வெளியே சென்றபோது, அங்கிருந்த தேவதைகள், பூமியில் எங்கும் இல்லாத அளவுக்கு அழகான தோட்டத்திற்கு தன்னை அழைத்துக் கொண்டு சென்றதாகவும் Betty கூறி உள்ளார். ஒரு சில தருணங்களுக்கு பிறகு, மீண்டும் தனது உடலில் நுழைந்ததாக Betty குறிப்பிடுகிறார். இறப்புக்கு பின்னுள்ள வாழ்க்கையை தான் அதிகம் விரும்பியதாகவும் கூறி உளர். தொடர்ந்து, தனது மருத்துவரிடமும் சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தனக்கு நடந்த அனுபவத்தை அவர் கூறி உள்ளார். அப்போது, Betty-ன் மருத்துவரும் மருத்துவ முறையில் சிறிது நேரம் அவர் இறந்ததை உறுதி செய்ததுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இதே போல, 31 வயதாகும் ஜெஸ்ஸி என்ற பெண்ணும் மருத்துவமனையில் வைத்து இறந்ததற்கு பின்னர், தனக்கு நடந்த சம்பவம் தொடர்பாக சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். "நான் உயிரிழந்த சமயத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த தோழி ஒருவரை நான் சந்தித்தேன். மிகவும் பிரகாசமாக ஒரு ஒளி தெரிந்ததும் அது தான் என்னுடைய இறப்பு என்றும் உணர்ந்து கொண்டேன்" என ஜெஸ்ஸி கூறி உள்ளார்.

இதன் பின்னர், மிகக் குறுகிய நேரத்திலேயே மீண்டும் தனது உடலுக்குள் அவர் சென்றதாகவும் ஜெஸ்ஸி தெரிவித்துள்ளார். பின்னர் இது தொடர்பாக தனது மருத்துவரிடம் ஜெஸ்ஸி தனது அனுபவத்தை தெரிவிக்கையில், அவர் ஒரு சில தருணம் உயிரிழந்து திரும்பியதை மருத்துவர் உறுதி செய்துள்ளார்.

இரண்டு பெண்கள், இறந்த சமயத்தில் தாங்கள் சந்தித்தது தொடர்பாக தெரிவித்துள்ள விஷயம், அதிகம் வைரலாகி வருகிறது. பலரும் இதனைக் கேட்டு வியப்பில் ஆழ்ந்தாலும், தங்கள் இறப்பில் நடந்ததாக அவர்கள் குறிப்பிடும் விஷயம், அவர்களே பயத்தில் நினைத்துக் கொண்ட விஷயமாக கருதி இருக்கலாம் என்றும் சிலர் குறிப்பிட்டு வருகின்றனர்.

Also Read | "இன்னும் 4,5 வருசம் நான் ஆடி இருந்தா.." மருத்துவமனையில் இருந்து அக்தர் வெளியிட்ட 'வீடியோ'.. எமோஷனல் ஆன ரசிகர்கள்

WOMEN, LIFE, SPOKE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்