சவப்பெட்டிக்குள்ள கேட்ட முனகல் சத்தம்..அடக்கம் செய்ய போறப்போ நடந்த அதிர்ச்சி சம்பவம்.. தெறிச்சு ஓடிய மக்கள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பெரு நாட்டில் இருந்து போனதாக கருத்தப்பட்ட பெண்மணியை அடக்கம் செய்ய முயற்சிக்கையில் சவப்பெட்டிக்குள் இருந்து முனகல் சத்தம் கேட்டதால் வந்திருந்த உறவினர்கள் அனைவரும் திகைத்த சம்பவம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | நமக்கா பரிசு கிடைக்கபோகுது.. லாட்டரி டிக்கெட்டை குப்பையில் வீசிய பெண்ணுக்கு அடிச்ச ஜாக்பாட்.. ஆனா லாஸ்ட்ல நடந்தது தான் ஹைலைட்டே..!

துயரம்

பெரு நாட்டைச் சேர்ந்தவர் ரோசா இசபெல் செஸ்பெடெஸ் கலாக்கா. இவர் கடந்த 26 ஆம் தேதி தனது தங்கை குடும்பத்துடன் காரில் சென்றபோது துரதிருஷ்டவசமாக மோசமான விபத்து ஒன்றில் சிக்கினார். இதனால் காரில் பயணித்த ரோசாவின் உறவினர்கள் காயமடைந்த நிலையில், ரோசா பலத்த காயம் காரணமாக மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, அவருக்கு லம்பாயெக்யூ நகரில் இறுதி ஊர்வலம் நடத்த இருப்பதாக அவரது உறவினர்கள் அறிவித்திருந்தனர். இந்த ஊர்வலத்தில் ரோசாவின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர்.

முனகல் சத்தம்

கிறிஸ்துவ முறைப்படி நடந்த இந்த இறுதி ஊர்வலத்தில் சவப்பெட்டியில் வைக்கப்பட்ட ரோசாவின் உடலை உறவினர்கள் தூக்கிச் சென்றனர். அப்போது சவப்பெட்டிக்குள் இருந்து வித்தியாசமான சத்தம் கேட்டிருக்கிறது. தொடர்ந்து உள்ளே இருந்து பெட்டியை தட்டும் சத்தம் கேட்கவே அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் பெட்டியை திறந்தபோது அவர்கள் கண்ட காட்சி அவர்களை திகைக்க வைத்திருக்கிறது.

பெட்டிக்குள் ரோசா கண்களை திறந்தபடி இருந்தது தான் அந்த அதிர்ச்சிக்கு காரணம். மேலும், ரோசாவிடம் இருந்து முனகல் சத்தமும் வெளிப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து, ரோசா அருகில் உள்ள மருத்துவமனைக்கு உறவினர்களால் அழைத்துச் செல்லப்பட்டார்.

தீவிர சிகிச்சை

ரோசாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இதயத்துடிப்பு இருப்பதாகவும், ஆனால் மிகவும் பலவீனமாக இருப்பதாகவும் கூறியுள்ளனர். இதனையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். ஆனால் அன்றைய தினமே சிகிச்சை பலனின்றி ரோசா உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது. பெருவில் அடக்கம் செய்ய முயன்றபோது சவப்பெட்டிக்குள் இருந்த பெண்மணி சத்தம் எழுப்பிய சம்பவம் அந்நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

WOMAN, FUNERAL, COFFIN, KNOCKS, சவப்பெட்டி, பெண்மணி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்