"70 நாள் கழிச்சு".. ஹாஸ்பிடல் படுக்கையில் முதியவர்.. அவருக்காக மனைவி செஞ்ச விஷயம்.. "கண்ணீரை வர வெச்ச பின்னணி!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இன்றைய காலக்கட்டத்தில் நம்மை சுற்றி நடக்கும் ஏராளமான விஷயங்கள், இணையத்தில் அடிக்கடி வைரல் ஆகிக் கொண்டு தான் இருக்கும்.

Advertising
>
Advertising

இதில், அதிர்ச்சிகரமான, வினோதமான அல்லது சோகம் ஏற்படுத்தும் சம்பவங்களும், மறுபக்கம் மனதையே பாசிட்டிவாக உணர வைக்கக் கூடிய விஷயங்களும், ஒருவித தாக்கத்தை உண்டு பண்ணும் விஷயங்களும் பகிரப்படுவதை நாம் பார்த்திருப்போம்.

அப்படி பாசிட்டிவான, நமது மனதில் ஒருவித தாக்கத்தை உருவாக்கக் கூடிய ஒரு வீடியோ தான், தற்போது இணையவாசிகள் மத்தியில் அதிகம் கவனம் பெற்று வருகிறது.

பொதுவாக, கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் உன்னதமான உறவு என்பது அவர்களின் இறப்பு வரை மிகவும் மகிழ்வுடனும், ஒற்றுமையுடனும் தொடர வேண்டும் என்பது தான் எதிர்பார்ப்பாக இருக்கும். அதனை வெறும் வார்த்தையாக மட்டும் சொல்லி விட்டுச் செல்லாமல், சிலர் தங்களின் கடைசி காலம் வரை, சிறந்த பந்தத்துடன் விளங்கவும் செய்வார்கள்.

அந்த வகையில், 70 வயதாகும் கணவர் மருத்துவமனையில் இருக்கும் போது அவரது மனைவி செய்யும் விஷயம் தொடர்பான வீடியோ தான், நெட்டிசன்கள் பலரையும் கண் கலங்க வைத்துள்ளது.

70 வயதாகும் முதியவர் ஒருவர், கடந்த 70 நாட்களாக மருத்துவமனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனையடுத்து, அங்கிருந்து அவர் டிஸ்சார்ஜ் ஆகும் தருணத்தில் அவரது அருகே இருக்கும் மனைவி, கணவரின் கையை பிடித்த படி பாடல் ஒன்றை பாடிக் கொண்டிருக்கிறார். மனைவியின் பாடலைக் கேட்டதும் தனது நடுங்கும் கைகளை மெல்ல மெல்ல உயர்த்தி அவர் முகத்தில் கை கொண்டு கணவர் வருடுகிறார். போர்ச்சுகீசிய மொழிப் பாடலை மூதாட்டி பாடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

தள்ளாடும் வயதிலும் இப்படி ஒருவருக்கு ஒருவர் அன்பை செலுத்திக் கொண்டு, தங்களின் நாட்களை கழித்து வரும் இந்த முதிர்ந்த ஜோடியின் வீடியோ, தற்போது பலரையும் எமோஷனல் ஆக மாற்றி உள்ளது. திருமணம் செய்து கொண்டு, இது போல வாழ்நாள் முழுக்க அன்பை பரிமாறிக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் சிலர் குறிப்பிட்டு வருகின்றனர்.

 

EMOTIONAL, COUPLE, WIFE, HUSBAND

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்