'நாடு இருக்குற நிலமைல உங்களுக்கு ‘அந்த’ மாதிரி படம் கேக்குதா!?’.. 'அதிபர் கிம்' இடம் வசமாக சிக்கிய குடும்பம்!.. அடுத்து நடந்தது 'இது' தான்!.. ஆத்தாடி!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வடகொரியாவில் ஆபாச படம் பார்த்த நபருக்கு, அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் அளித்துள்ள தண்டனை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உலக நாடுகளில் வடகொரியாவில் நடக்கும் சம்பவங்கள் எப்போதும் மர்மமாகவே இருக்கும். அங்கு ஊடங்கள், சமூக வலைதளங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் கடுமைாயன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வடகொரியாவில் நடக்கும் எந்த ஒரு விஷயமும் வெளி உலகத்தின் பார்வைக்கு வருவது சிரமாகவே இருக்கும்.

வடகொரியா நாடு முழுவதும் ஆபாசத்திற்கு எதிரான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. வடகொரியாவில் ஆபாச படம் பார்ப்பது மற்றும் அது சார்ந்த விஷயங்களில் ஈடுபடுவர்கள் மீது மரணதண்டனை வரை தண்டனைகள் விதிக்கப்படுகிறது. ஏனெனில், ஆபாச படம் சமூகத்தை சீரழிக்கும் என்பது அதிபர் கிம் ஜாங் உன்னின் கருத்தாக உள்ளது.

இந்நிலையில், வடகொரியாவில் ஒரு குடும்பத்தில் உள்ள நபர் ஒருவர் ஆபாச படம் பார்த்துள்ளார். இதனை அந்நாட்டு காவல் அதிகாரிகள் ஐபி (IP address) முகவரியை வைத்து கண்டுபிடித்துள்ளனர்.

ஆபாச படம் பார்த்த குற்றத்திற்காக அந்த நபர் மற்றும் அவரது குடும்பத்தையும் நாடு கடத்தி உள்ளனர். வடகொரியாவின் எல்லையில் அவர்கள் விடப்பட்டுள்ளதாக வடகொரிய ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது. நல்வாய்ப்பாக அந்த நபருக்கு மரண தண்டனை வழங்கப்படவில்லை.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்