"தங்கச்சி பாசத்துல 'டி.ஆர்'அ மிஞ்சிட்டான் பா இந்த பையன்"... 'நாய்க்கடி' வாங்கி தங்கச்சிய காப்பாத்தியிருக்கான்... மொத்தமா 90 தையல்... நெகிழ வைத்த 'குட்டி' ஹீரோ!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தனது தங்கையை நாயிடம் இருந்து காத்துக் கொள்ள வேண்டி சிறுவன் ஒருவன், தன்னுடைய உயிரை கூட ஒரு பொருட்டாக மதிக்காமல் நாய்க்கடி வாங்கிய சிறுவன் குறித்த செய்தி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரிட்ஜர் வாக்கர் என்னும் ஆறு வயது சிறுவன் ஒருவன், தனது தங்கையை துரத்திய நாய் ஒன்றின் முன்பு விழுந்து தனது தங்கையை நாயிடம் இருந்து காப்பாற்றியுள்ளான். இந்த விபத்தில், அந்த நாய் சிறுவன் வாக்கரின் இடது கன்னத்தில் கடித்து குதறியுள்ளது. இதில் படுகாயமடைந்த சிறுவனுக்கு மொத்தம் 90 தையல்கள் போடப்பட்டுள்ளன.

இதுகுறித்த சிறுவன் மற்றும் சிறுவனின் தங்கையின் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்த சிறுவனின் அத்தை இந்த சம்பவம் குறித்து நீளமான பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதே போல, காயத்துடனும் தங்கையை கை கொண்டு மறைத்து வைத்து காப்பாற்றியதாக பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த விபத்திற்கு பின்னர், 'எங்களிடையே முதலில் ஒருவர் உயிரிழப்பதாய் இருந்தால் அது நானாக தான் இருக்க வேண்டும்' என சிறுவன் கூறியுள்ளான்.

இதனை பதிவிட்ட அவரது அத்தை, சிறுவனின் நெகிழ்ச்சியான செயலை அதிகம் பகிர வேண்டும் எனவும், சிறுவனுக்கு ஆதரவான கமெண்ட்களை பதிவு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பான பதிவு, இணையதளங்களில் அதிகம் வைரலான நிலையில் கடினமான நிலையிலும், தனது தங்கையை காத்துக் கொள்ள சிறுவன் எடுத்துக் கொண்ட ஆபத்தான முயற்சியால் பலர் உருகிப் போயுள்ளனர். 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்