இப்படி மொத்த வீடும் 'சாம்பல்' ஆகும்னு தெரியாம போச்சே...! 'அத' விரட்டுறதுக்கு தானே 'தீ' பத்த வச்சேன்...! - கதறும் வீட்டு ஓனர்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் பாம்பு வீட்டிற்குள் வந்த காரணத்தால் 1 மில்லியன் டாலர் வீட்டை கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

அமெரிக்காவில் மேரிலேண்ட் பகுதியில் இருக்கும் வீட்டில் பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. இதனை கண்ட உரிமையாளர் தனது வீட்டில் இருந்த பாம்புகளை புகையை வைத்து விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

ஆனால், இதுவே அவருக்கு ஆப்பாக அமைந்துள்ளது. வீட்டின் உரிமையாளர் பாம்புகளை விரட்ட புகையை பயன்படுத்தியபோது அருகில் நிலக்கரி இருந்துள்ளது. இந்த நிலக்கரி தீப்பிடித்து எரிந்ததன் விளைவாக பெரும் தீவிபத்து ஏற்பட்டு வீடு முழுவதும் சேதமடைந்துள்ளது.

முழு வீடும் அழிந்த அந்த வீட்டின் மொத்த மதிப்பு 1 மில்லியன் டாலர். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.7.5 கோடி. தீ பற்றிய வீட்டை அணைக்க சுமார் 75 தீயணைப்பு வீரர்கள் இணைந்து தீயை அணைக்க போராடியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சாதராண பாம்பை பிடிக்க போய் முழு வீட்டையும் எரித்த சம்பவம் அமெரிக்க மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, வீடு தீப்பிடித்து எரியும் படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவியுள்ளன.

SNAKE, FIRE, HOUSE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்