‘ரொம்ப நன்றி புதின்’.. ரஷ்ய அதிபருக்கு நன்றி சொன்ன உக்ரைன் பெண்.. இதுக்கு பின்னாடி இருக்கும் மிகப்பெரிய வலி..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ரஷ்யா பிரதமர் புதினுக்கு உக்ரைன் பெண் நன்றி சொன்ன சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

தங்கம் வரை தாக்கத்தை ஏற்படுத்திய ரஷ்யா-உக்ரைன் போர் .. விலைய கேட்டா ஆடிப்போவீங்க ஆடி!

உக்ரைன் மீது 5-வது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. அதில் உக்ரைனின் முக்கிய நகரங்களை குறிவைத்து ரஷ்ய ராணுவம் வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும் குடியிருப்பு பகுதிகள் மீதும் தாக்குதல் நடைபெறுவதால், மக்கள் பலரும் வீடுகளை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல் உக்ரைன் ராணுவமும் ரஷ்யா மீது பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையேயும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா நிபந்தனையுடன் அழைப்பு விடுத்தது. அதனால் விரைவில் இருநாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் உக்ரைன் பெண் ஒருவரின் வீடு தீப்பற்றி எரிந்தது. இதனால் மனவேதனை அடைந்த அப்பெண் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ‘இப்போதுதான் குளிருக்கு நல்ல இதமாக இருக்கிறது. இதற்காக புதினுக்கு நன்றி’ என ரஷ்ய அதிபரை வஞ்சப் புகழ்ச்சியாக விமர்சனம் செய்திருந்தார்.

“நான் பெரிய ரவுடின்னு எல்லாத்துக்கும் காட்டணும்”.. திட்டமிட்டு பட்டப்பகலில் நடந்த பயங்கரம்.. கைதான நபர் கொடுத்த பகீர் வாக்குமூலம்..!

UKRAINE WOMAN THANKS PUTIN, HOME, WAR, ரஷ்யா பிரதமர், ரஷ்யா தாக்குதல், உக்ரைன், உக்ரைன் பெண்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்