'தடுப்பு மருந்தை ஊசியா போட வேணாம்'... 'இது மட்டும் ஓகே ஆனா'... 'ஒரு பெரிய பிரச்சனை தீர்ந்துடும்'... 'பெரும் நம்பிக்கை தரும் புது ஆய்வு!'...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா தடுப்பு மருந்தை ஊசி மூலம் செலுத்தாமல் வாய் வழியாக உள் இழுத்தால் சிறந்த பலன் கிடைக்குமா என சோதிக்கும் ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்குவதில் பல்வேறு நாடுகள் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கொரோனா வைரஸ் சுவாசம் சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்துவதால் கொரோனா தடுப்பு மருந்தை ஊசி மூலம் செலுத்தாமல் வாய் வழியாக உள் இழுத்தால் சிறந்த பலன் கிடைக்குமா என சோதிக்கும் ஆய்வை இங்கிலாந்தை சேர்ந்த இம்பீரியல் கல்லூரி மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தொடங்கியுள்ளனர்.

இந்த நிறுவனங்கள் தயாரித்துள்ள 2 தடுப்பூசிகளை 30 தன்னார்வலர்களுக்கு உள்இழுப்பான் எனும் இன்ஹேலர் போன்ற கருவி மூலம் வாய்வழியாக செலுத்த முடிவு செய்துள்ளனர். இதில் சிறந்த பலன் கிடைத்தால், கொரோனா தடுப்பு மருந்து ஆய்வில் இது ஒரு சிறந்த முடிவாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. ஏனெனில் ஊசியாக செலுத்துவதை விட, உள் இழுப்பதற்கு குறைவான டோஸ் மட்டுமே தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள இம்பீரியல் கல்லூரி ஆய்வுக்குழு தலைவர் கிறிஸ் சியூ, "இன்புளூவன்சா தடுப்பு மருந்தை (தடுப்பூசி) நாசி ஸ்பிரே மூலம் உள் செலுத்துவதால் சிறந்த பலன் கிடைப்பதுடன், இந்த நோய் பரவுவதும் தடுக்கப்படுகிறது. இதைப்போல கொரோனா தடுப்பு மருந்தை செலுத்தும்போதும் சிறந்த பலன் ஏற்படும்" என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்