"நாங்களும் செய்வோம்-ல..." 'பேரனின் 'ஏட்டிக்கு போட்டி' அறிவிப்பால்... அதிர்ச்சியில் மகாராணி'!!.. இளவரசர் ஹாரி - மேகன் தம்பதி vs ராணி எலிசபெத்!.. தொடரும் பனிப்போர்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இங்கிலாந்து ராணி எலிசபெத் நடத்தும் விருது வழங்கும் விழாவிற்கு போட்டியாக இளவரசர் ஹாரி - மேகன் தம்பதி தனியாக விருது விழா ஒன்றை நடத்த உள்ளனர்.

"நாங்களும் செய்வோம்-ல..." 'பேரனின் 'ஏட்டிக்கு போட்டி' அறிவிப்பால்... அதிர்ச்சியில் மகாராணி'!!.. இளவரசர் ஹாரி - மேகன் தம்பதி vs ராணி எலிசபெத்!.. தொடரும் பனிப்போர்!

இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து விலகிய இளவரசர் ஹாரி - மேகன் தம்பதியினர், தற்போது கலிஃபோர்னியாவில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு விருது வழங்கி கௌரவுப்படுத்துவது ராணி எலிசபெத்தின் வழக்கம்.

அந்த வகையில், ராணி எலிசபெத்தின் நைட்ஹூட்ஸ் அமைப்பு இந்த ஆண்டும் விருதுகளை வழங்க உள்ளது.

இதற்கிடையே, அரச குடும்பத்தில் இருந்து விலகி, தனியாக வாழ்ந்து வரும் இளவரசர் ஹாரி - மேகன் தம்பதி, தற்போது அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதன் படி, இளவரசர் ஹாரி - மேகன் தம்பதி, ஆர்க்வெல் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பின் மூலம், ராணி எலிசபெத் விருது வழங்க உள்ள துறைகளில், இவர்களுக்கு பிடித்தமான ஆளுமைகள் தேர்வு செய்து, தனியாக விழா எடுக்க முடிவு செய்துள்ளனர்.

அதுவும், ராணி நடத்தும் விழாவுக்கு போட்டியாகவே நடத்துகின்றனர்.

இது, இங்கிலாந்து அரச குடும்ப வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்