துருக்கி பூகம்பம்.. இடிபாடுகளில் சிக்கிய இளைஞர்.. உயிரை காப்பாத்திய வாட்சப் ஸ்டேட்டஸ்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

துருக்கியில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக்கொண்ட இளைஞர் ஒருவர் வாட்சப் ஸ்டேட்டஸ் மூலமாக பத்திரமாக மீட்கப்பட்டிருகிறார்.

Advertising
>
Advertising

                         Images are subject to © copyright to their respective owners.

Also Read | "எப்படி கணக்கு கரெக்ட்டா இருக்குதா?".. முதல் நாளிலேயே சரியா சொன்ன தினேஷ் கார்த்திக்.. "அப்படியே நடந்திருக்கு பா"

மத்திய கிழக்கு நாடான துருக்கியில் கடந்த வார திங்கட்கிழமை காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் தென் மத்திய பகுதியில் உள்ள கசியான்டெப் நகருக்கு அருகே இந்த நிலநடுக்க மையம் இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. இதனை தொடர்ந்து அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் அந்நாடே ஸ்தம்பித்துப்போனது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கையும் ஒருபக்கம் அதிகரித்து வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.

இந்த சூழ்நிலையில் கிழக்கு துருக்கி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் வாட்சப் ஸ்டேட்டஸ் மூலமாக இடிபாடுகளில் இருந்து அதிகாரிகளால் காப்பாற்றப்பட்டிருகிறார். துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தை சேர்ந்தவர் போரான் குப்பட். 20 வயதான இவர் கடந்த திங்கட்கிழமை கிழக்கு துருக்கியில் உள்ள தனது உறவினர்களை சந்திக்க சென்றிருக்கிறார். முதல் முறை பூகம்பத்தில் இருந்து பத்திரமாக தப்பித்த போரான் அடுத்த நிலநடுக்கத்தின் போது துரதிருஷ்டவசமாக சிக்கிக்கொண்டார்.

தனது தாய், பாட்டி மற்றும் உறவினர்களுடன் அவர் தங்கியிருந்த வீட்டு பூகம்பத்தால் அப்படியே தரைமட்டமானது. இடிபாடுகளுக்குள் சிக்கிய போரான் மயக்கத்தில் இருந்து மீண்ட உடன் தன்னிடம் இருந்த செல்போன் மூலம் மீட்புப் படைக்கு தகவல் கொடுக்க நினைத்திருக்கிறார். இதனை தொடர்ந்து வாட்சப் மூலமாக ஸ்டேட்டஸ் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

தன்னுடைய பெயர், தான் சிக்கி இருந்த கட்டிடம் ஆகிய முகவரிகளை தெளிவாக குறிப்பிட்டு,"இந்த வீடியோவை யாரேனும் பார்த்தீர்கள் என்றால் தயவு செய்து உதவவும்" என உருக்கமாக கோரிக்கை வைத்திருந்தார். கொஞ்ச நேரத்தில் இது மீட்புப் படை அதிகாரிகளுக்கு தெரிய வந்திருக்கிறது. அதன் பலனாக போரான் மீட்கப்பட்டிருக்கிறார். இருப்பினும் அவருடைய உறவினர்கள் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பதாகவும் அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்திருக்கிறார் போரான்.

Also Read | "இன்டர்நேஷனல் மேட்ச்ல கூட இப்டி நடந்ததில்ல போலயே".. சச்சினையே மிரள வெச்ச ஃபீல்டர்.. வைரல் வீடியோ!!

TURKEY, YOUTH, RESCUE, TURKEY EARTHQUAKE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்