VIDEO: திடீரென 'வெள்ளை' நிறத்துல மாறிய ஆறு...! 'தொட்டு நாக்குல டேஸ்ட் பண்ணினா பால் தான்...' எப்படி இது நடந்துச்சு...? - வியப்பில் மக்கள்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இங்கிலாந்தின் டுலைஸ் ஆறு, இந்தியாவின் பாலாறாக மாறி கரைபுரண்டு ஓடியுள்ளது.

டுலைஸ் என்ற ஆறு, இங்கிலாந்தின் தென்கிழக்கு வேல்ஸ் நகரில் கார்மர்தென்ச்ரிங் என்ற பகுதியில் அமைந்துள்ளது. மேலும் அந்தப் பகுதி வழியே நேற்று டேங்கர் லாரி ஒன்று பால் ஏற்றிக்கொண்டு கார்மர்தென்ஸ்ரீங் பகுதியில் உள்ள சாலையில் சென்றுக்கொண்டிருந்தது.

அந்நேரத்தில் எதிர்பாராத விதமாக பால் ஏற்றி சென்ற அந்த டேங்கர் லாரி டுலைஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மேலும் அந்த விபத்தின் போது டேங்கர் லாரியில் இருந்த பால் எல்லாம் ஆற்றில் கலந்ததுள்ளது. இதன்காரணமாக, டுலைஸ் ஆறு முழுவதும் பாலாறு போன்று காட்சியளித்து வருகிறது.

மேலும், விபத்துக்குள்ளான லாரியை ஓட்டி சென்ற டிரைவர் சிலகாயங்களுடன் பத்திரமாக மீட்கப்பட்டார். அதன்பின் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் ஆற்றுக்குள் கவிழ்ந்த டேங்கர் லாரி ஆற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது.

அந்த நீரை சுவைத்து பார்த்ததில் பால் என்பதை அறிந்து அந்த மக்கள், வெள்ளையாக மாறிய ஆற்றை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர்.

 

மற்ற செய்திகள்