VIDEO: இதயத்துடிப்பு நின்னு போச்சு... இப்ப என்ன செய்ய?.. பதறிப்போன இளைஞர்... நெகிழவைக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தாய்லாந்தில் சாலை விபத்தில் இதயதுடிப்பு நின்ற யானை குட்டி ஒன்று, சிபிஆர் சிகிச்சை எனப்படும் இதயத்தை இயங்க செய்வதற்கான செயற்கை சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்துள்ளது.

சாந்தாபூரி எனும் பகுதியில் சாலையை கடக்க முயன்ற யானை குட்டி மீது அவ்வழியே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த யானை குட்டி உயிரில்லாத சடலம் போல சாலையில் கிடந்தது.

தகவலின்பேரில் சம்பவ இடம் வந்த வன மருத்துவர்கள், மனிதர்களுக்கு அளிக்கப்படுவது போல யானை குட்டியின் இதயம் இருக்கும் பகுதியை 2 கைகளால் அழுத்தவே 10 நிமிடங்களில் இதயதுடிப்பு வந்து எழுந்தது.

இந்த சம்பவம் இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Video Credits: The Guardian

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்