'உயிருக்கு உயிரா காதலிச்சோம்'... 'இப்படி காரணமே இல்லாம பிரேக் அப் பண்ற'... 'கோபத்தின் உச்சிக்கு போன காதலி'... வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

காதலன் பிரேக் அப் செய்ததால் கோபத்தின் உச்சிக்குப் போன காதலி செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

காதலர்களின் பிரேக் அப் என்பது மிகவும் துயரமான ஒன்று. அந்த வகையில் தாய்லாந்தைச் சேர்ந்த பெண் ஒருவரும், இளைஞரும் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளார்கள். ஆனால் அவர்களுக்குள் அவ்வப்போது சில பிரச்சனைகள் வந்த வண்ணம் இருந்துள்ளது. இதனால் அந்த பெண்ணின் காதலன் திடீரென பிரேக் அப் செய்துள்ளார்.

அந்த பெண் எவ்வளவோ முயன்றும் அந்த இளைஞரைச் சமாதானம் செய்ய முடியவில்லை. இதனால் கோபத்தில் உச்சிக்கே சென்ற அந்த பெண் தான் பரிசாக அளித்த ரூ.28 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை தீ வைத்துக் கொளுத்தினார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

/>இந்த சம்பவத்தால் யாரும் காயமடையவில்லை என்றாலும், அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்ற ஆறு வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாயின. தீயணைப்பு வீரர்களின் விரைவான நடவடிக்கை தீ ஒரு பெரிய விபத்து தடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்