VIDEO: 'டேய் இங்க வா... போன வச்சு என்ன பண்ணிட்டு இருக்க'?.. பேச பேச ஆப்கன் இளைஞரை... துப்பாக்கியால் தாக்கிய தாலிபான்!.. எதுக்கு தெரியுமா?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் எல்லை மீறி பொதுமக்களிடம் அட்டகாசம் செய்வதற்கு சான்றாக ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அந்நாட்டில் உள்ள மக்களை, குறிப்பாக பெண்களை ஒடுக்கும் பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

உதாரணமாக, அங்கு ஒரு ஆண் தாடியை ஷேவ் செய்தால் பாரபட்சம் இன்றி சித்திரவதை மற்றும் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக நேரிடும்.

எனினும், இங்கிலாந்து மற்றும் அமெரிக்க படைகள் விமான நிலையத்தில் இருப்பதால், ​​தாலிபான்கள் நிறைய சட்டங்களை அமல்படுத்தவில்லை. ஆனால், சர்வதேச படைகள் வெளியேறி வரும்போது ஒவ்வொரு தனி நபருக்கும் பொருந்தும் பல விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், தலைநகர் காபூலில் உள்ள ஒரு கடைத் தெருவில், தனது மொபைல் போனில் பாட்டு கேட்டு நடந்து சென்றுகொண்டிருந்த ஒரு இங்கிலாந்து இளைஞரை, தாலிபான் பயங்கரவாதி ஒருவர் துப்பாக்கி நுனியால் நெஞ்சிலேயே குத்தியுள்ளார்.

மேலும், அவரது நெத்திப்பொட்டில் துப்பாக்கியை வைத்து கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார். பிறகு மற்றோரு தாலிபான் அந்த இளைஞரை அங்கிருந்து செல்லுமாறு அனுப்பி வைக்கிறார்.

இதனை அங்கிருந்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் தனது மொபைல் போனில் படம் பிடித்து, செய்தி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த வீடியோ தற்போது வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்