'ஒமிக்ரான்' வைரஸ 'எங்க தடுப்பூசி' சும்மா கதற விட்ரும்...! - கெத்து காட்டும் நாடு...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தற்போது மீண்டும் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றான 'ஒமிக்ரான்' தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்டது. கொரோனா வைரஸ் மீண்டும் உருமாறியதால் உலக மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertising
>
Advertising

இந்த வைரஸ் தொற்று கொரோனா வைரஸை விடவும் மிகவும் ஆபத்தை விளைவிக்கும் என விஞ்ஞானிகள் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்.

எனவே, சர்வதேச நாடுகள் அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தும் முனைப்பை காட்டி வருகிறது. ஆயினும், ஒமிக்ரான் வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் ஆரம்பித்து பெல்ஜியம், இஸ்ரேல், ஹாங்காங் என்று பரவத்தொடங்கி விட்டது. தற்போது வரை இந்த வைரஸ் 17 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகையான வைரஸ் தொற்று கொரோனாவில் இருந்து மீண்டவர்களை தாக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு தடுப்பு மருந்து எப்படி தயார் செய்வது என உலக நாடுகள் திணறிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், ஸ்புட்னிக்-வி மற்றும் ஸ்புட்னிக்-லைட் தடுப்பூசிகள் ஒமிக்ரான் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று ரஷ்யா மகிழ்ச்சி அடைய வைக்கும் தகவலை தெரிவித்துள்ளது.

இது பற்றி மேலும் கருத்து கூறிய ரஷ்ய சுகாதாரத்துறை, ஸ்புட்னிக்-வி மற்றும் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிகள் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் கொரோனா வகையிலான வைரஸை முற்றிலும் அழிக்கும் வல்லமை கொண்டது. எனவே தேவையான அளவு தடுப்பூசிகள் உலக நாடுகளுக்கு வழங்க தயாராக இருக்கிறோம் என தெரிவித்துள்ளது.

SPUTNIK V, SPUTNIK LITE, OMICRON

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்